சென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி,
மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து,
உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும்,
மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்
தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
பிளஸ்
2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக
மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக,
கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியோர் தங்களின்
விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அதனைத் திருத்திக்
கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை
15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர்
ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள
எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர்,
ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.