அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான
கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறைசெயலர் சுனில் பாலிவால்
புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு விரும்பிய
பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை அறிமுகம் செய்ய இருக்கிறது
அண்ணா பல்கலைக்கழகம்.
படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும்
தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப்
பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித்
துறையும்.
அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம்,
புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல்,
போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.
ஐ.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு அரசு பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்த சக்தி என்ற 7ஆம் வகுப்பு மாணவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நிகழாண்டில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை : தமிழகம் முழுக்க, தொடக்கப் பள்ளிகளில் கல்விசார்
பணிகள் மேற்கொள்ள, கம்ப்யூட்டர்கள் வினியோகிக்க, நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனமானது இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுவதால், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.