இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24
வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு
எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது.
தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எழிலக வளாகம்,
மின் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், வழக்கத்தை விட, நேற்று பரபரப்பாக
செயல்பட்டன.
தற்போதும் மாநில அரசின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான
தேர்வுகளை எழுதுவதற்கு இளைஞர்கள் இவ்வாணையத்தின் அறிவிப்புகளையே
சார்ந்துள்ளனர். பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வுகள் எவ்வாறு
நடத்தப்படுகின்றன என்பதைக் காணலாம்.
கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம்
அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா
என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல்,
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய்
நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது உயர்த்தியும் குறைத்தும்
அறிவித்து வருகின்றன.
'காவிரி நதிநீர் பங்கீடு குறித்து, கர்நாடகா மற்றும் தமிழகத்தில்,
போராட்டங்கள், கடையடைப்பு கள் நடத்தக் கூடாது; அமைதி மற்றும் சட்டம் -
ஒழுங்கை பாதுகாக்க, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
சுப்ரீம் கோர்ட், நேற்று தீர்ப்பு அளித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி
தமிழகத்தில், இன்று முழு கடையடைப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில்
மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான
சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
ஊராட்சி தேர்தலில், நான்கு பதவிகளுக்கு, வண்ண ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட
உள்ளது.ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு
உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில்,
ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படஉள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,
தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வெள்ளிக்கிழமை (செப். 16) கடைசி
நாளாகும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) குரூப்
4 பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 5,451
காலிப் பணியிடங்களை நிரப்ப, வரும் நவம்பர் 6 -ஆம் தேதி தேர்வு
நடைபெறவுள்ளது.
ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து
வழக்குகளையும் ஒன்றாக இணைத்து அடுத்த மாதம்(அக்டோபர்)4–ந் தேதி இறுதி
விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு இன்று உச்ச
நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் இன்று (14.09.2016
) கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி
சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள்
வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும்
வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள்
இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி
உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள்
வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும்
வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள்
இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி
உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் சங்கம் ஆதரவு
தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது
குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம்
வியாழக்கிழமை நடைபெறுகிறது.