Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.11.21

 திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண் : 464

குறள்:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

பொருள் :
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.


இரண்டொழுக்க பண்புகள் :

1.தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் ,

2. இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்

பொன்மொழி :

உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ---ஐசக் நியூட்டன்

பொது அறிவு :

1. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? 

போலாந்து. 

2. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? 

55 மொழிகளில்.

English words & meanings :

Back on your feet - start to work after a period of illness. சுகம் பெற்று மறுபடியும் வேலை செய்வது. 

Salt of the earth - good character people very important for the humans. மனிதர்களுக்கு உப்பாக இருந்து பாதுகாத்தல்

ஆரோக்ய வாழ்வு :

குழந்தைகளுக்கு பயிற்சி


தசைகள், எலும்பு, மூட்டுக்களை பலமாக்கவும், கை, கால் வலுவடையவும் பயிற்சிகளை செய்யலாம். குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம்.  உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் ஃபிட்டாக இருக்கும்.

  • குழந்தைகளுக்குத் தொங்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிகம் உயரம் இல்லாத வீட்டின் உத்தரக் கம்பின் மேல் குழந்தையின் கைகளை வைத்து தொங்கும் பயிற்சி. இப்படி தினமும் ஐந்து நிமிடம் தொங்குவதால், தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் பகுதி நன்கு வலுவடையும்.
  • காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம்.  இதனால், குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும்.  உடல் சோர்வு நீங்கும்.
  • நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். உயரம் குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி பலன் தரும்.
  • நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான்.
  • நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும்  குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
  • பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம்.
  • படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.
  • அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லாம். எந்தப் பயிற்சியில் ஈடுபடும்போதும், பெற்றோர் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கவேண்டியது அவசியம்.

கணினி யுகம் :

Ctrl+ Arrow up - Bring to front, 

Ctrl+ Arrow down - Send to back

நவம்பர் 03

அமார்த்ய குமார் சென் அவர்களின் பிறந்தநாள்





அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 31933இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.[1]

நீதிக்கதை

ஆமை ஒன்று  ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.  அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா, ஆமை அண்ணா!  நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.  உன் முதுகில்  ஒரு ஓரமா  இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா  அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது. 
ஆமைக்குப் பாவமாக இருந்தது.  இருந்தாலும்  ஒரு எச்சரிக்கைக்காக ,
 " ஒன்னப் பாத்தா எனக்கும்  பாவமாதான் இருக்குது.  முதுகுல  ஏத்திக்கிட்டுப் போறேன் .  ஆனா வழியில  எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ ,  உரிச்சுப் புடுவேன் . ஆமா"
முதுகில் ஏற்றிக்கொண்டது.
தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம்  போனதும்  தேளுக்கு ஒரு சந்தேகம்  ,"பாறை மாதிரி  இருக்குதே இந்த  ஓடு!  இதுல நம்மால கொட்ட முடியுமா?  சரி. லேசா கொட்டித்தான் பாப்போமே"
மெல்ல ஒரு கொட்டு கொட்டியது. ஆமை கேட்டது
 " ஏய் என்ன பண்ற ?
" இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு.  மன்னிச்சுடுங்க" இது தேள். 
   ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  கரையை  அடைய  இன்னும் பாதி தூரம் இருந்தது.  தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம், " லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட  அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக்  கொட்டினால்? சற்று  அழுத்தமாகவே கொட்டியது.
ஆனாலும்  ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை.
" என்னடா தம்பி,  புத்தியக்காட்டுறியா? "
என்றது ஆமை .
" அட  இல்லண்ணே.  கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது.  கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே! "
என்றது தேள்.  ஆமை தலையை  அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே
நீந்தியது. கொஞ்சம் நேரம் சென்றது.  இப்போது கரைக்கு  இன்னும் சில  அடி தூரம்தான்.  இப்போது தேளுக்கு  தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது.  
"நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்!  சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே. இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் "
பலத்தையெல்லாம் திரட்டி  அழுத்தமாக ஒரு போடு போட்டது. 
ஆமைக்கு இப்போது கோபம் வந்தது.  
"நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது.  தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். 
" பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை  மாத்திக்க முடியாது.  இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது.  
ஆமை சிரித்தபடியே சொன்னது , " உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே  எனக்கும் ஒன்னு  உண்டு.  அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது.  எழுந்து பார்த்தால் தேள்  ஆமையின் முதுகில் இல்லை.  அது ஆமை நீருக்குள்  முழுகும்போதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு செத்துப் போய்விட்டது.
நீதி : உதவி செய்பவர்களை வருந்த செய்தால் அழிவு நிச்சயம்

இன்றைய செய்திகள்

03.11.21

◆பள்ளிகள் திறப்பு: 'அறிவியல் அறிவோம்' நிகழ்ச்சி மூலம் உற்சாகமூட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

◆ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றோர் உதவித்தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

◆கனமழை காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். காலை 6 மணிமுதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

◆நாட்டில் 92% அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆2070-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

◆டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.


Today's Headlines

🌸Schools are reopened: Tamil Nadu Science Movement encouraging students through "Know Science" program

🌸If the IAS students cleared the preliminary they can apply for the coaching with a scholarship says All India Administrative Services coaching center.

🌸Due to the heavy rains, there is an Orange alert for four districts of TN

🌸During Deepavali people has to burst green crackers only. The timing is morning 6 to 7 and night 7 to 8 said the Department of Environment

🌸In our Nation, more than 92% of school teachers got vaccinated. Information from the central government 

🌸Before 2070 India fixed the goal for the emission of Carbon as Zero said PM in Seasonal Changes Meet.

 🌸T20 World Cup: South Africa beat Bangladesh.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

நவம்பர் 2021 நாட்காட்டி!

EMIS - 1 to 8th Students Attendance Option Now Open

.com/img/a/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 461

குறள்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

பொருள் :
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

பழமொழி :

Do good to those who harm you


பகைவனை நேசித்துப்பார்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன். 

2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்

பொன்மொழி :

கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். ---- அல்க்ஸாண்டர் போவ்

பொது அறிவு :

1. உலகின் அகலமான நதி எது? 

அமேசான் நதி. 



2. குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 

புதன் கோள் (மெர்குரி).

English words & meanings :

Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

கண்களைப் பாதுகாப்பதற்கான குறிப்புகள்

  • இரண்டு தேக்கரண்டி உப்பை ஒரு லிட்டர் இளம் சூடான நீரில் சேர்த்து, கண்களைக் கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
  • ஒரு சிறிய வெந்நிறத்துண்டை, மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். கண்நோய் உள்ளவர்கள் அந்த வெண்ணிறத் துண்டுகளைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தல் இவைகள் சரியாகும்.
  • உடல் சூட்டினால் அல்லது கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து காணப்படுவது உண்டு. இதற்கு புளியம்பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் கண்கள் சிவப்பது சரியாகும்.
  • மருதோன்றி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் கண் சிவப்பு நீங்கும்.
  • நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்வலி நீங்கும்.
  • கண் பார்வைத் தெளிவு பெற கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
  • மிளகு, சீரகம் இவற்றில் சிறிதளவு எடுத்து பொடி செய்து, எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண்ணிலிருந்து நீர்வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • பொன்னாங்கண்ணிக் கீரையுடன் நெய்யையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் நரம்புகள் பலப்படும், பார்வை தெளிவடையும்.
  • மல்லித்தழை மற்றும் கேரட்டை தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து தினமும் குடித்துவர கண் நரம்புகள் பலப்படும்.

கணினி யுகம் :

Shift + R - Add rounded box, 

Shift + S - Add segmented line


நீதிக்கதை

 மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்

30.10.21

* மேற்கு வங்கத்தில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்கவும், விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் தடை.

* அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளுக்கு பலரும் உதவி செய்வது பெருமையாக உள்ளது. அரசு பள்ளிகளுக்கு உதவ இணையதள பக்கம் உருவாக்க உள்ளோம், அதன்மூலம் உதவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .

*  காஷ்மீரில் பனிப்பொழிவால் ஆப்பிள் தோட்டங்களுக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை இயற்கை பேரிடராக அரசு அறிவித்துள்ளது. பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். எந்த விவசாய நிலமும் வெளியாட்களுக்கு வழங்கப்படவில்லை, நிலத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்று ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

* 11 ஆண்டுகளுக்கு பின்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதால் இன்று மதியத்துக்குள் அதிப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* டி20 உலகக்கோப்பை தொடர்:  சார்ஜாவில் இன்று நடைபெற்ற  23-வது லீக் ஆட்டத்தில்  வங்காளதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட்  இண்டீஸ் அணி ’திரில்’ வெற்றி பெற்றது.

* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் லட்சயா சென் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Today's Headlines

* The West Bengal high Court banned all types of crackers and their sales.

* Education Minister Anbil Mahesh said, "Government schools are the symbol of pride, not poverty". And also he said "I am proud by the fact that many are helping government schools. So we are going to create a platform for the people who are willing to help the government schools. They can help through this"

* Tamil Nadu CM visited the excavation site at keezhadi

* The damage of Apple Orchards at Kashmir is declared a Natural Disaster by the Government. The government also said the farmers will get the compensation amount for their loss. " No farmland is given to outside people. It is our duty to protect the land" said Governor Sinha Manoj

* After 11 years the Krishnaraja Sahar Dam in Karnataka reached its full capacity of 124.80 feet. As the dam is filled it is expected that there will be the release of water.

*T20 World cup: In the 23rd League Play West Indies won Bangladesh by only 3 runs and gave a thrill to everyone who is watching it.

* In French open Badminton match P. V. Sindhu and Latchaya of India reached the 3rd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

ஆசிரியர்கள் தேவை - 29.10.2021

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive