Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.09.21

  திருக்குறள் :

அதிகாரம்: கல்வி 

குறள் எண்:399 

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு 

காமுறுவர் கற்றறிந் தார். 

பொருள்: தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

பழமொழி :

A good horse  often wants a good  spur.


 சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

நான் அஞ்ஞானி,ஆத்மாவை இனிமேல்தான் அறியவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் ஒழிக்க வேண்டும். நீங்களே ஆத்மா......ரமண மகரிஷி.

பொது அறிவு :

1.தனிநபர் போட்டிகளில் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் யார்? 

திரு. சுசில் குமார்.

2.ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்? 

திருமதி . P.V. சிந்து.


English words & meanings :

Ring - a circle of jewelry worn on the finger. மோதிரம். 

Ring - to cause a bell to ring. மணி அடித்தல்

ஆரோக்ய வாழ்வு :

பிளாக் டீயின் நன்மைகள்


1)பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

2)பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது. 

3)பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.

4)ஒரு கப் பிளாக் டீ உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

5)பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.

6)இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.

கணினி யுகம் :

F10 - Activates Windows Menu Bar. 

ALT+F4 - -Closes the current window.

செப்டம்பர் 25:

வாங்கரி மாத்தாய் அவர்களின் நினைவுநாள்  

வாங்கரி மாத்தாய் (Wangari Maathaiஏப்ரல் 11940 - செப்டம்பர் 252011கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.

சதீஷ் தவான் அவர்களின் பிறந்தநாள்


சதீஷ் தவான்  (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஒரு இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை

முயற்சி செய்வோம்

ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான். 

ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள். 

நீதி :

முயன்றால் முடியாதது எதுவுமில்லை.


இன்றைய செய்திகள்

25.09.21

★பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

★உயர்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான 2-வது கட்டத் தேர்வு நாடு முழுவதும் அக்.24-ம் தேதி நடைபெறும் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

★விடுபட்டுப்போன 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ நடப்பாண்டில் வழங்கப்படும் என்று மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

★கல்வி நிறுவனங்களுக்கு காப்புரிமை கட்டணங்களில்‌ 80% தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

★23 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதனின் காலடி தடங்கள் வடக்கு அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

★ஆஸ்ட்ராவா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா-ஷுவாய் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

★உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பைக்கான போட்டி கத்தார்  நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது . இதில் இந்தியாவின் அர்ச்சனா காமத் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் இந்தியா சார்பில் உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பையில் நீடிக்கும் ஒரே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

★ Anna University has announced the final examination for those who have arrears for 20 years in engineering courses.

 ★ NCERT has announced that the 2nd phase of the National Performance Examination, which provides scholarships up to higher education, will be held across the country on October 24.

 ★ Director of the Central Institute of Classical Tamil Studies Ira Chandrasekaran has said that the ‘Artist Karunanidhi Classical Tamil Award’ will be given to the artists in addition to the people who missed the award 10 years.

 ★ 80% reduction in patent fees for educational institutions has been announced.

 ★ 23 thousand-year-old man's footprints found in North America.

 ★ India's Sania-Shuai pair advanced to the semifinals of the Ostrava Open tennis tournament.

 ★ The World Table Tennis Star Cup is being held in Doha, Qatar.  India's Archana Kamath has qualified for the quarterfinals.  He is the only Indian to last in the World Table Tennis Star Cup.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Kalvi TV - Today ( 23.09.2021 ) Programme Schedule

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.09.21

  திருக்குறள் :

அதிகாரம்:வலி அறிதல்

குறள்: 472

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

விளக்கம்:

தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவோர்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

பழமொழி :

Better to bend than to break.


உடைந்து போவதை விட, வளைந்து கொடுப்பது மேல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

தொழிலாளர்கள் கடமையைச் செய்வதைத் தடுத்தால் உணவு ,உடை கிடைப்பது தடைப்படும்.---- விவேகானந்தர்.

பொது அறிவு :

1."காட்டு மரங்களின் சக்கரவர்த்தி " என அழைக்கப்படும் மரம் எது? 

தேக்கு மரம்.

2.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படுத்தப்படும் மரம் எது? 

வில்லோ மரம்.


English words & meanings :

Light - energy which helps people to see things, 

Light - not heavy; easy to lift

ஆரோக்ய வாழ்வு :

நெய்யின் நன்மைகள் சில

1)நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதுடன் இரத்ததையும் சுத்தப்படுத்தும்.


2)நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வலுவைத் தருவதுடன் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது.

3)நெய்யில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களைவெளியேற்றச் செய்யும்.

4)நெய் உடல் எடையைக் குறைக்க மிகவும் எளிதான மருந்து. ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிட்டால் உடலில் மலச்சிக்கலைத் தடுத்து எடையைக் குறைக்கும்.

கணினி யுகம் :

F1 - Displays help information.

 F2 - Rename a selected item.

செப்டம்பர் 22 :

மைக்கேல் பரடே அவர்களின் பிறந்தநாள்




மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 221791 – ஆகஸ்டு 251867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல்மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

நீதிக்கதை

வல்லவர் யார்?

ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 

மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 

எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 

நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.

இன்றைய செய்திகள்

22.09.21

◆ஊரகப் பகுதிகளில் நிலமற்ற, வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி ஊரக வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க சிறப்புப் பணிப்பிரிவு (Task Force) அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கள், கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப்பு.

◆தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

◆மத்திய அரசின் திட்டங்களை எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண் கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

◆கனடா நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராகயிருக்கிறார். 

◆இந்தியாவின் 70வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ராஜா ரித்விக் பெற்றுள்ளார்.

◆உள்ளூரில் விளையாடும் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

📃The Government of Tamil Nadu has announced that a Special Task Force has been set up to provide land to the landless and homeless people in rural areas under the Rural Housing Scheme.

 📃 3,200-year-old lid-covered old people's coffin (thazhi)  scratch marks and symbols were discovered at Munaiveneri near Ilayan Gudi, Sivagangai District.

 📃 If the NEET examination continues to exist in Tamil Nadu, the rural poor students will not be able to join the medical course, said Judge AK Rajan in a panel report with figures.

 📃 Farmers will be issued a new 12 digit ID card for easy access to Central Government schemes.

 📃The ruling Liberal Party has won the parliamentary election in Canada.  Thus, the leader of the Liberal Party Justin Trudeau has become the Prime Minister for the 3rd time.

 📃 Raja Ritwik from Telangana has won the 70th Grand Chess Master title of India.

 📃 The schedule of the Indian cricket team for the local tournament has been announced.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive