மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியில் போதே 'எப்படி சிந்திக்க வேண்டும்' என்பது
முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும். கல்விமுறை அதற்கேற்றாற் போல்
மாறுதலடைய வேண்டும்.
இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில்
தேர்ச்சி பெறுவர் என்று பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ்
நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 72 ஆயிரம் பேருக்கு ‘நீட்’
தேர்வு பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டது.