அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை
குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை
ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும்
கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.
பீஹார் மாநிலத்தில், 2016ல் நடந்த, பிளஸ் 2
தேர்வில், முதல் மதிப்பெண் பெறுவதில் நடந்த ஊழலில் மூளையாக செயல்பட்டவரின்,
4.53 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை நேற்று முடக்கி வைத்தது.
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி
உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின்
நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.