தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில
மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி.,யின், பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல்
பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற
தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது.
''தனியார்
பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவற்றின் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன்
எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:
'பல்கலை,
கல்லுாரி மாணவர்களை, 'துாய்மை இந்தியா' திட்டத்தில் இணைக்கும் வகையில்,
விருப்பப்பாட தேர்வின் கீழ், களப்பணிக்கு இரு புள்ளிகள் வழங்கப்படும்' என,
பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.
அரசு
சார்பில் நடத்தப்படும், உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணலில்,
ஓய்வூதியர்கள் பங்கேற்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர்,
அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின்
கண் பார்வை திறனை பாதிக்கும் என்பதால் கரும்பலகையில் 3 செ.மீ.க்கு குறையாத
அளவில் எழுத வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை
வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தின் அசல் பாடலைப் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க
தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்திற்கான
டெண்டர் விதிமுறைகளைத் தளர்த்த அரசுக்கு உத்தரவிடச் சென்னை உயர் நீதிமன்றம்
மறுப்புத் தெரிவித்துள்ளது.