அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 9533 செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கணினி
அறிவியலை பள்ளிகளில் தனிப் பாடமாகவும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம்
வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என
தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில்
வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல்
புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு அதிகாரி
பாலசந்தர் வலியுறுத்தினார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின் சம்பளம், சலுகைகளுக்கு எவ்வளவு செலவாகிறது
என்ற விவரங்களை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு, நாடாளுமன்ற ஆய்வுக்
குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
மாணவர்களின்
விபரங்களை சேகரிக்கும், 'எமிஸ்' கல்வி மேலாண்மை இணையதளம் அடிக்கடி,
'மக்கர்' ஆவதால், கணினி மற்றும் மவுசுடன் ஆசிரியர்கள் மல்லுக்கட்டும்
நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.