திருச்சியில், காய்ச்சல் பாதிப்பால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று வருபவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் சந்தித்து
சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
கேரளா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் நீட் மற்றும் போட்டி
தேர்வுகளுக்கு மாணவர்கள் எவ்வாறு தயார்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்து
தமிழக கல்வித்துறை சார்பில் இணை இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை
தாக்கல் செய்து உள்ளது.
நாடு முழுவதும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு புதிய விதிகளை உருவாக்க,
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சிறப்பு கமிட்டியை
உருவாக்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் 2016ஆம் ஆண்டுஅக்டோபரோடு முடிந்துவிட்ட நிலையில் கடந்த ஒரு
வருடமாகத் தேர்தல் நடப்பது பல்வேறு காரணங்களால் தடைபட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியத்
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவை வாயிலான வருவாய் 25.49 சதவிகிதம்
சரிந்துள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது, கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய நோட்டுகளாக
மாற்றி தர, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, நடிகர் சரத்குமாருக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்கள், வாரத்தில் ஒரு நாள், கதர்
ஆடை அணியும் திட்டத்தை, காந்தி ஜெயந்தி அன்றாவது, தமிழக அரசு அறிவிக்குமா
என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிப்படி, 'நெட்' தேர்வு
முடிக்காத, ௧,௦௦௦ கவுரவ பேராசிரியர்களுக்கு பதிலாக, புதிய பட்டதாரிகளை
நியமிக்க, உயர் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி.,
படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை
சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள்
உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.