ஊதிய
உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசு ஊழியர்
சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,
மேட்டூர்: இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரி, இரண்டாம் நாளாக நேற்றும்,
மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்ததால், பெற்றோரிடம் மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர் பேச்சு நடத்தினார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற
பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என,
எச்சரிக்கப்பட்டுள்ளது.
வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம்
உதயமாகிறது. நாளை மறுநாள் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில்,
இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு
ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட்
மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.
இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.