உத்தரபிரதேசத்தில் இனிவரும் நாட்களில் நாட்டிற்காகவும்,
சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு
தினங்களுக்கு விடுமுறை கிடையாது என முதல்வர் யோகி ஆதித்யநாத்
அறிவித்துள்ளார்.
தமிழகத்தில்,
10ம் வகுப்பு சான்றிதழில், 14 இலக்க நிரந்தர குறியீட்டு எண்ணைச் சேர்த்து
வழங்க, அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர்
சேர்ப்பதற்கான பணிகள் துவங்கின.
இன்ஜினியரிங்
மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், வெளி மாநிலத்தில் படித்த
மாணவர்களுக்கு, தனி விதிகள் கொண்டு வருவது குறித்து, உயர் கல்வித்துறை
ஆலோசனை நடத்தி வருகிறது.
'தேசிய
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,
புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, தங்களின் இணைப்பில் உள்ள
பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீன்வள படிப்புகளில் சேர மே மாதம் 10-ம் தேதி முதல் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர்
(பொறுப்பு) கே.ரத்னகுமார் அறிவித்துள்ளார்.
இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே
வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி.,
அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை:உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை களை, ஜூலைக்குள் முடிக்க அவகாசம்
அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு
தாக்கல் செய்துள்ளது.