உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்,
பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல்
பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில், 1,080
பேராசிரியர்கள் வேலையே இல்லாமல், சம்பளம் பெறுவதாகவும், அதனால், மாதம், 20
கோடி ரூபாய் வீணாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள 42 ஆயிரம் ஓய்வூதியர்களின் நலனை
கருத்தில் கொண்டு மாவட்ட ஓய்வூதிய அலுவலகத்தை அமைக்க வேண்டும்,'
என, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர் மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு
ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என தேர்வுத்
துறை துணை இணை இயக்குனர் அமுதவல்லி எச்சரித்தார்.
”மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் இது நிறைவேறும்,” என,
’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் முதுநிலை
விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குரோம்பேட்டை:அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து, பள்ளிக்கு சரியாக
வராமல், வேலைக்கு செல்லும், ௧௦ம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களின், பெற்றோரை
தேடி செல்லும் முயற்சியில்,ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.
புதுடில்லி
: 'பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வரும் தகவல்கள் தவறானவை; மக்கள்
அச்சமடைய வேண்டாம்; அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என,
ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.