பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள்
உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள்
குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு
வருகிறது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த
புயலுக்கு 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.
டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, ஐகோர்ட்டில்,
மாநில தேர்தல் கமிஷன் பதில் கூறியுள்ளதால், தேர்தல் பிரிவினருக்கு இடியாப்ப
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு
இன்று சம்பள தினம். அவர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு வசதியாக வங்கி
ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? என எதிர்பார்த்து இருக்கின்றனர்.
நுாறு, ஐநுாறு ரூபாய் நோட்டுகளின்,
'முதல்வனான' ஒரு ரூபாய் நோட்டு உருவாகி, இன்றுடன் நுாறு ஆண்டாகிறது. 'ஒத்த
ரூபா நோட்டு' என, சற்றே மலிவாக அழைக்கப்பட்டாலும், பிற ரூபாய் நோட்டுகள்
உருவாக, இந்த ஒரு ரூபாய் நோட்டு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது.