கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும்
செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான
விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது.
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்கள்
பற்றிய விவரங்களை கணினியில் பதிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று
தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நோய் தடுப்புக்கான புதிய ஆன்டிபயாடிக்
மருந்து கண்டுபிடித்த, வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரான, பிரசாந்த் மனோகர்,
20, என்பவருக்கு, ஐரோப்பா - இந்தியா இணைந்த அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
நிறுவனம், இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
மத்திய அரசு பணியில் இருக்கும் போது ஊனம்
ஏற்பட்டால், அந்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவதோ, பதவி குறைப்போ செய்யக்
கூடாது' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம்,
பி.எட்., நர்சிங் போன்ற படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள்
துவங்கிவிட்ட நிலையில், வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க
மறுப்பதாக புகார் எழுந்துள்ளன.
அரசு
பள்ளிகளில், பணிக்கு செல்லாமல், 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள்
பட்டியல் தயாரிக்க, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்கள்
பணியாற்றும் பள்ளிகளில், திடீர் ஆய்வும் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு, தனியார்துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை
செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் 5 லட்சம் வேலை
வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
''உயர் கல்வி நிறுவனங்கள் திறன்
மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமுதாய
சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு,'' என கேரள கவர்னர் சதாசிவம்
வலியுறுத்தினார்.
விருதுநகர்: விமானப்படையில்
சேர விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்க
அக்., 13 கடைசி என வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், எந்த வகையான வினாக்கள் இடம்பெறும் என தெரியாமல்,
குழப்பத்தில் உள்ள மாணவர்கள், தேர்வுத் துறையின் வினா வகை குறித்த
அறிவுரைகளை எதிர்பார்த்து உள்ளனர்.
7 வது சம்பள கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட உள்ளதை
தொடர்ந்து ஜனாதிபதியின் சம்பளத்தை மாதத்திற்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து
ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.