சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதற்கு, தரமான ஆசிரியர்கள் இல்லாததே முக்கியக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். இதே நிலை நீடித்தால், மாணவர் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகவே இருக்கின்றன.