அரசு பள்ளியில், மாணவனின் முதுகில் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்திய
சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னுார்
அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் பிரவீன்குமார். வகுப்பில், தமிழாசிரியர்
மாரப்பன், பிரவீன்குமார் முதுகில் அமர்ந்து, பாடம் நடத்தியதாக அவரது தாயார்
பரிமளா, கலெக்டரிடம் புகார் அளித்தார்.