கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.
ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் 50-ஆவது ஆண்டு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 500-க்கும் அதிகமான உடற்கல்வி ஆசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட
பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காததால் மாநில, தேசிய விளையாட்டுப்
போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுதிரை மூலம் பாடம்
கற்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்: ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வசதியால்
உற்சாகம்
அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு
முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி
அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு
பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில்,
அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை
அண்ணா பல்கலை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, இரண்டாம்
கட்ட, 'நீட்' மருத்துவ பொது நுழைவு தேர்வில், தாமதமாக வந்தோர்
அனுமதிக்கப்படவில்லை; அதனால் பலர், 'கேட்' ஏறி குறிக்க முற்பட்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில்,
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு
தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை
நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல்
விண்ணப்பிக்க வேண்டும்.
நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர் பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கல்வித் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப்
பணியாளர்கள் உள்ளிட்டோரை விருப்ப மாறுதல் முறையில் இடமாற்றம் செய்ய
நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்க
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால்
பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை
உருவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில்
மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 28 இல் நடைபெற உள்ளது.
மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்த விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி
வைக்கப்பட்டது. வருகிற 4–ந்தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள்
செல்கின்றன.
விளையாட்டு தொடர்பான பட்டம் மற்றும் டிப்ளமோ
படிப்புகளுக்கு, தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை
அறிவிக்கப்பட்டுள்ளது.
Consitition No. Constituencies Name Member Name Party Contact No. Email Id
1 Gummidipoondi Thiru K.S. Vijaya Kumar AIADMK 94452 79999 mlagummidipoondi@tn.gov.in
தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு,
தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில்,
ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங்
தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த
உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள்
முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்.,பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு
ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசுக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை
செய்துள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இனசுழற்சி முறையில்
நியமிக்க திதிராவிடர்,பழங்குடியினர் இடைநிலைஆசிரியர்களுக்கு பற்றாக்குறை
ஏற்பட்டது.
திருவண்ணாமலை; பைக்கில் சென்ற தலைமை
ஆசிரியர் மீது, திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம்
அடைந்தார்.
தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின்
அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும்
பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக
செயல்படுத்தி வரும் விலையில்லா திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் கடந்தாண்டில்
14 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என தமிழக
அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், அங்கீகாரம் கிடையாது' என, அனைத்து
பி.எட்., கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை
விடுத்துள்ளது.கலை மற்றும் அறிவியலில், இளங்கலை மற்றும் முதுகலைப்
பட்டப்படிப்பு முடித்தவர்கள், பள்ளி ஆசிரியராக சேர, பி.எட்., என்ற ஆசிரியர்
கல்வியியல் படிப்பை முடிக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பான, டி.டி.எட்., டிப்ளமோ படிப்பில் சேர,
நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு
வரையில்பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2 முடித்து டி.டி.எட்.,
படித்திருந்தால் போதும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
துறைகளில் 903 புதிய பணியிடங்களை தோற்றுவித்து அரசு முதன்மைசெயலாளர் ஹன்ஸ்
ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய உள்ளாட்சி
பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 23ல் முடிகிறது.
பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 26ல்
நடக்கிறது.'ஆர்கிடெக்ட்' என்ற கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜி., படிப்பு,
பி.ஆர்க்., என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின்
இணைப்பில் உள்ள கல்லுாரிகளின், 2,800 இடங்களில், 1,800 இடங்கள், தமிழக
அரசின், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன.
' லோக்சபாவில், பட்டதாரிகள் மற்றும் மாணவர்களுக்கான கள பயிற்சியான,
'இன்டர்ன்ஷிப்' பயிற்சியை பெற விண்ணப்பம் அளிக்கலாம்' என, கல்லுாரிகளுக்கு
சுற்றறிக்கை வந்துள்ளது.லோக்சபாவில், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு,
மாத ஊக்க ஊதியத்துடன் கூடிய, 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான, தேசிய
தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான, 'நீட்' தேர்வு, இன்று இரண்டாம் கட்டமாக
நடக்கிறது; 4.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். 'அனைத்து மருத்துவ
படிப்புகளிலும் சேருவதற்கு, மத்திய அரசின், 'நீட்' தேர்வை கட்டாயம் எழுத
வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அண்ணா பல்கலையின் கல்லுாரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு, 48 இடங்கள்
ஒதுக்கப்பட்டு உள்ளன. அதற்கான, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
முதுநிலை கணிதப் படிப்பு படிப்போருக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க,
வரும், 29ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தேசிய உயர்கல்வி கணித
வாரியம் சார்பில், கணிதப் படிப்புகளை ஊக்குவிக்க உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
இன்ஜினியரிங் முதுநிலை படிப்பான, எம்.இ., - எம்.டெக்., போன்றவற்றில்
சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. இன்ஜி.,
கல்லுாரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, 'டான்செட்' எனப்படும், பொது
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு சென்னையில் 14,500 பேர் எழுதுகிறார்கள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக ளுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் நாளை நடக்கிறது. சென்னையில் 14,500
மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION