திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப்
பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய பென்ஷன்
திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
வகுப்பறை கண்காணிப்பு; கல்வித்துறை அட்வைஸ்
தினமும் காலை,மாலை வேளைகளில் வகுப்பறைகளை கண்காணிக்க வேண்டும்,என,தலைமை ஆசிரியர்களுக்கு,கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
![](https://lh3.googleusercontent.com/-NQ55edM2qpU/V4XPe8t9FoI/AAAAAAAAI0c/SH2EwNNguUQ/%25255BUNSET%25255D.jpg)
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை
ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு
அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பொறியியல் பொது கலந்தாய்வில் இதுவரை
47 ஆயிரத்து 623 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.பொறியியல்
படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் மாதம்
27-ம் தேதி தொடங்கிதொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5
மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய
வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் 2003
ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பி.எட். சேர்க்கைக்கு ஜூலை 4-ஆம் வாரத்தில் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்பட்டு, செப்டம்பர் 2-ஆவது வாரத்துக்குள் கலந்தாய்வை நடத்தி
முடிக்கப்படலாம் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது மாறுதல் மற்றும் ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வு கோரி, தொடக்க கல்வி
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன.படிப்படியாக
மதுவிலக்கு
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல்
அறிக்கையில், ‘‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு
அமல்படுத்தப்படும்’’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி
இருந்தார்.
கனடாவைச் சேர்ந்த டேட்டா விண்ட் நிறுவனம் 4ஜி டேப் லெட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மோர் ஜிமேக்ஸ் பிராண்ட் 4ஜி 7 என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த டேப்லெட்டின் விலை ரூ.5,999 ஆகும்.
பேரிக்காய் அப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் அப்பிளில் இல்லாத விட்டமின் ஏ
இப்பழத்தில் உள்ளது. அப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் அப்பிளைவிட பல
மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி
சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும்
கிடைக்கும்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொள்ளாச்சி வட்டக் கிளையின் சார்பில்
பொள்ளாச்சி கல்வி மாவட்டம் முழுவதும் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர் மந்தர்
வினாடி வினா போட்டி வருகிற 23-07-2016 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு
பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
விழுப்புரத்தில் அரசுப்பள்ளி அருகே மாணவர்களுக்கு போதையை உண்டாக்கக்கூடிய
100 கிலோ போதை சாக்லெட்டினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன்
கடந்த மாதம் பள்ளி அருகே உள்ள கடையில் சாக்லெட் வாங்கி சாப்பிட்டுள்ளான்.
அரசு வங்கி கடனை திரும்ப கேட்டு தனியார் நிறுவனம் மூலம் வாய்பேச முடியாத
மாற்றுத்திறனாளி இன்ஜினியரிங் மாணவனை மிரட்டுவதாக அவரது தந்தை கலெக்டரிடம்
புகார் மனு அளித்தார். மதுரை பொன்னகரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ
டிரைவர்.
புதுவையில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து
துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர்
நாராயணசாமி தெரிவித்தார்.
வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயத்தை கண்டித்து வரும் 29ம் தேதி
அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
செய்துள்ளனர்.இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும்
சூழ்நிலைஉருவாகியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன
பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது: -
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக 100 உதவி விற்பனையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர்.
தொடக்ககல்வி - டெங்கு மற்றும் சிக்கன் குனியா தொற்று நோய் தடுப்பு
நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர்
செயல்முறைகள்
ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர் பணியிடை
மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில்
உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில்,
மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.
திருவாரூர் அருகேயுள்ள மதகரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், கணினி செயலி (ஆப்ஸ்) மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கிறார்.
கிராமப்புறத்தில் உள்ள இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது, 1 முதல் 5-ம் வகுப்பு வரை 36 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
வீட்டுப்பாடத்தை மாணவர்கள் ரசித்து செய்யும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடவாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடத்தில் புதியதொரு செயல்முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
16.07.2016 அன்று நடைபெற இருந்த தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி மாற்றப்பட்டு 23.07.2016 அன்று நடைபெற உள்ளது
- ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
- கலந்தாய்வு
அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை
அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய
விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில்
வெளியிடப்பட உள்ளன.
சி.பி.ஐ. (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச்செயலாளர்
ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. ”தனியார்
பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப்
பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்ற
கோரிக்கையை இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர்
பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.
பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும்
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப்
பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
![](https://lh3.googleusercontent.com/-6LcTK1adgKM/V4RCcsvZQ9I/AAAAAAAAIyE/KtxrvdwLF6A/%25255BUNSET%25255D.jpg)
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் 50 சதவீதத்துக்கு மேல் விபத்துகள்
ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் பலி ஏற்படுவதோடு, உடல் உறுப்புகளையும்
இழக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக
மது அருந்தி விட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தாலே, இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத
வகையில் ஒரு கருவியை சிவகங்கை மாவட்டம், திருவேலங்குடி அரசு பள்ளி 9ம்
வகுப்பு மா
ணவர் பிரேம்குமார் கண்டுபிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுடனான ஆலோசனை கூட்டம்,
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் சங்கர்
மற்றும் போக்குவரத்துகழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், ஏழு அரசு சட்ட
கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், எல்.எல்.பி., படிப்புடன் இளங்கலை
பட்டப்படிப்பும் சேர்த்து, ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்தபடிப்பாக
நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 முடித்தோர், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளில் சேர முடியும்.
மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டிப்ளமோ இன் பார்மசி
முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்கீழ் 85 அரசு
தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை
பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.