தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஓளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வை
ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடத்தக்கோரி தமிழகம் முழுவதும்
அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வருகிற ஜூலை 8-ம் தேதி வெள்ளிக்கிழமை
மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மத்திய அரசுப் பணிகளுக்கு இணையம் மூலம் தேர்வு
முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும்
மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இணையதளம் மூலம்
நடத்த பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது.
பி.எட்., தேர்வு வினாத்தாள் வழங்க தாமதம்: தேர்வர்கள் பரிதவிப்பு
தருமபுரியில் நடைபெற்ற பி.எட்., தேர்வில், தேர்வர்களுக்கு வினாத்தாள்
வழங்கவும், அறை ஒதுக்குவதிலும் நிகழ்ந்த தாமதத்தால் தேர்வர்கள்
பரிதவிப்புக்குள்ளாகினர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி
நாகர்கோவிலில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் (ஜாலி பொனிடிக்) பயிற்சி அளிக்கப்பட்டது.
இன்ஜி., படிப்பு எதிர்காலம்இன்று நிபுணர் விளக்கம்
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு ஆலோசனை தரும், 'தினமலர்' நேரடி
கேள்வி - பதில் நிகழ்ச்சியில் இன்று, இன்ஜி., படிப்புகளின் எதிர்காலம்
குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
சிறப்பு மருத்துவ படிப்பு: அவகாசம் நீட்டிப்பு.
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கும்
வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை, 5ம் தேதி வரை, தமிழக அரசு நீட்டித்து
உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.எஸ்., - எம்.டி.,
படிப்புகளை முடித்தோருக்கான, டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற
மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன.
தேர்வில் மாணவர்கள் காப்பி நடவடிக்கைக்கு உத்தரவு.
தேர்வில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக காப்பியடித்தது குறித்து, ஆய்வு நடத்தி
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை பல்கலைக்கு, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Salient features of Pay Commission as approved by the Government
Salient features :-
1. Separate Pay Matrices for Civilians, Defence and MNS.
2. Fitment Multiple of 2.57. Min Pay of Rs 18000.
"உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்"
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில்
கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த்
திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல
வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை
கிசுமுசுப் பழம் என்பார்கள்.
ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ரயில் கட்டண சலுகைக்காக அடையாள அட்டையைப் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?
தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும்,
இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு
செய்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?
தமிழகத்தில் ஆசிரியர்
இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை,
ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஊதியக் குழு பரிந்துரையால் கூடுதல் நிதிச்சுமை: ரூ.31,000 கோடியைத் திரட்ட ரயில்வே முயற்சி
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 31,000
கோடி நிதிச் சுமையை, வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு ரயில்வே துறை முயற்சி
செய்யும் என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை
கூறினார்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.
அரசு பணி தேர்வில் தேறியோருக்கு நடத்தை சான்றிதழ் அவசியமில்லை
'அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை
அனுப்ப, அவர்களின் நடத்தை சான்றிதழுக்காக, காத்திருக்க தேவையில்லை' என,
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு கட்டுப்பாடு
'மூன்று ஆண்டு அனுபவம் உடைய ஆசிரியர்கள் மட்டுமே, பி.எட்., செய்முறை தேர்வு
கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை
அறிவித்துள்ளது.
மத்திய அரசு விருது விண்ணப்பம் வரவேற்பு
'மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
அறிவித்துள்ளது.
மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்
வேடசந்துார்,:வேடசந்துார் அருகே, இரண்டு ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசு
பள்ளிக்கு, தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து செல்கிறார்.
பி.இ., தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்
“கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த
ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என காரைக்குடியில் இரண்டாம் ஆண்டு
நேரடி சேர்க்கையை பார்வையிட்ட தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி
தெரிவித்தார். காரைக்குடி அழகப்ப செட்டி யார் இன்ஜி., கல்லுாரியில், பி.இ.,
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த 29-ம் தேதி
தொடங்கியது. நேற்று மெக்கானிக்கல் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது.
பி.எட்., தேர்வில் கட்டுப்பாடு
ஆசிரியர் கல்வியான பி.எட்., படிப்பில், 2015ல், புதிய பாடத்திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டு படிப்பு, இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டு
உள்ளது. முதலாம் ஆண்டுக்கு எழுத்து தேர்வு, வினாத்தாள் முறை மற்றும்
மதிப்பீட்டு முறையில்,பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
2011-12, 2012-13, 2014-15 Social Science BT's Regulation Order
- 2011-12, 2012-13, 2014-15 Social Science BT's Regulation Order
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்?சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவு!
டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி
திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த
வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து
அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை உறுதி செய்ய வேண்டும்' BRTE மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது
கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய
வேண்டும் என்று நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
புள்ளியியல் ஆய்வாளர் பணி நேர்காணல் அறிவிப்பு.
'பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில், உதவி புள்ளியியல் ஆய்வாளர்
பணிக்கு, ஜூலை, 11ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும்' என, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு
நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக 6 மாத
காலத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய உள்துறை
அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: