* செய்முறை நோட்டு புத்தகத்தை சமர்ப்பிக்காதவர்களுகக்கு, 20 மதிப்பெண் ரத்து செய்யப்படும்
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம்
பிளஸ்
2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.
தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இணைப்பு சான்றிதழ் இல்லை: பி.எட்., கல்லூரிகளில் முறைகேடு
தமிழகத்தில்
உள்ள, 650 பி.எட்., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தும், இன்னும்
பல்கலையால் இணைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சான்றிதழ் வழங்க,
விதிமுறைகளை மீறி, சிலர் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்
எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள, 650 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில்,
பி.எட்., - எம்.எட்., டிப்ளமோ கல்வியியல் படிப்பும்கற்று தரப்படுகின்றன.
இந்த கல்லுாரிகள் தேசிய கல்வியியல் பயிற்சி கவுன்சிலான என்.சி.டி.இ.,யின்
அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு
பெற்று நடக்கின்றன.
சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
'கட்டண
பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள
சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக்
கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
CRC Deteails
பிப்ரவரி மாத CRC கூட்ட நாட்கள் விவரம்தலைப்பு : வகுப்பறையில் பயிற்சிகளின் தாக்கம் தொடக்க நிலை : 20.02.2016 உயர்தொடக்கநிலை : 27.02.2016 SSA SPD proceedings 1108/a11/trg/2015 DT.5.2.2016
29 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு
அரசு
உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 29 பேர் பதவி
உயர்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், நியமிக்கப்பட்ட பதவி மற்றும் ஊர் விவரம் வருமாறு:-
இலவச கட்டாய கல்வி விவகாரம் : பதில் மனுவில் முழு விவரம் இல்லை மத்திய அரசு அதிகாரிக்கு அபராதம்
இலவச
கட்டாய கல்வி விவகார வழக்கில் மத்திய அரசு அதிகாரி தாக்கல் செய்த பதில்
மனுவில் முழு விவரங்கள் இல்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு
அதிகாரிக்கு அபராதம் விதிக்கிறோம் என்று உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பிப். 10ல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
பேச்சுவார்த்தைக்கு
கூட அரசு அழைக்காததால், திட்டமிட்டபடி, பிப்., 10 முதல் காலவரையற்ற
போராட்டம் நடக்கும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில
செயலாளர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''புதிய ஓய்வூதிய திட்டம்
ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல்
அறிக்கையில் தெரிவித்தார். அதை நிறைவேற்றக் கோரி தான் போராடி வருகிறோம்.
கடந்த ஜன., 21ல் சென்னையில் முதல்வரை சந்திக்க போராடினோம்.
மகாமகம்: 3 மாவட்டங்களுக்கு விடுமுறை
மகாமக
பெருவிழாவையொட்டி, பிப்., 22ல், மூன்று மாவட்டங்களுக்கு, அரசு பொது
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி மாதம், குரு, சிம்ம ராசியில் இருக்கும்
போது, மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும், பொருந்தி வரும் காலம்,
மகாமகம் ஆகும். இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அன்று,
நதிகளில் புனித நீராடல் நடத்துவது சிறப்பு.
ஜாக்டோ போராட்டம்: ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்குப் பட்டியல் தயார்
கடலூர்:மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கல்வித்துறை பட்டியல் தயாரித்துள்ளது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) 3 நாள் போராட்டத்தை
அறிவித்து தமிழகம் முழுவதும் கடந்த சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில்
நடத்தியது.
"ஷிப்ட்' முறையில் பள்ளிக்கு சென்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்.
"அரசு பள்ளிகளுக்கு "ஷிப்ட்' முறையில் செல்லும் ஆசிரியர்கள் வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றப்படுவர்,''என, கலெக்டர் வெங்கடாசலம் எச்சரித்தார்.
அண்ணாமலை பல்கலை 369 பேராசிரியர்கள் கூண்டோடு மாற்றம்.மேலும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடத்திற்க்கு ஆபத்து?
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலையில், அளவுக்கு அதிகமாக பணியில் இருந்த, 369 பேராசிரியர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டு, அரசு கலை கல்லுாரிகளின் காலியிடங்களில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சத்துணவு அமைப்பாளர், சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே. நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ்2 பொதுத்தேர்வு: பிப்.11 முதல் விடைத்தாளுடன் முகப்புத் தாளை இணைக்க அறிவுறுத்தல்
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத் தாளை இம்மாதம் 11ஆம் தேதி முதல் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இணைக்க வேண்டும்என அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தியுள்ளார்.பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஊழியர்களுக்கு கட்டுப்பாடு இஷ்டத்திற்கு 'லீவ்' எடுத்தால் சம்பளம் 'கட்'
தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் டேவிதார், அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:அரசு ஊழியர்கள் பணி செய்யாமல், அனுமதிக்கப்பட்ட விடுப்பு நாள் முடிந்த பின்னும், நீண்ட விடுப்பில் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை, ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
Centum Coaching Team - 10th Science
Prepared by Mr. S. DHAKSHANAMOORTHY, M.A., M.Sc., M.Sc., M.Phil., B.Ed.,