Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

25 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தென்மேற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்

அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஐ. தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியீடு

காவல் துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு முடிவு இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 1078உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 

ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறைகளுக்கு பூட்டு

மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:


பிளஸ் 2 மாணவர்களுக்கு J.E.E., தேர்வு அறிவிப்பு

பிளஸ் 2 முடிக்க உள்ளோர், உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான,ஜே.இ.இ., பொது நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளுக்கு, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதே, மிகப்பெரிய லட்சியம். 

TNPSC : குரூப்-4 பதவிக்கான கலந்தாய்வு நாளை திட்டமிட்டப்படி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.

புயல் சின்னமாக மாற வாய்ப்பு: காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் - சென்னை–கடலூரில் அதிக மழை பெய்ய வாய்ப்பு

வங்க கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த மண்டலம் கடலூர் மாவட்டத்தை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

Flash News: கனமழை காரணமாக நாளை (16/11) விடுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - 24

  1. ஈரோடு பள்ளிகள் மட்டும்
  2. திருப்பூர் பள்ளிகள் மட்டும்
  3. புதுக்கோட்டை பள்ளிகள் மட்டும்
  4. கிருஷ்ணகிரி பள்ளி கல்லூரிகள் விடுமுறை
  5. தஞ்சாவூர் பள்ளிகள் மட்டும் விடுமுறை 
  6. நீலகிரி பள்ளிகள் மட்டும் விடுமுறை
  7. கன்னியாகுமரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. சேலம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. திருவாரூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. நாமக்கல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. காஞ்சிபுரம் (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
  12. திருச்சி (பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)

பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

         உயர்கல்விக்கான உதவித் தொகை பெற, விண்ணப்பங்களை நேரிடயாகவும், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா

       கனமழை - வேலூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக  பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் திருமதி.சபீதா அவர்கள் நியமனம்.

        அடுத்த மூன்று நாட்களுக்கு மாவட்டம்  முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள எதுவாக அவரின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

          பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் பொதுவாக நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா.

         தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.

RTI Letter

       ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு...RTI--அரசு கடித எண் ;41541/சி.எம்.பி.சி./2013.நாள்.20.8.2013.

வடதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும் மழையை பெய்விக்கும் என்று வானிலை இலாகா அறிவித்தது.

     இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ஒரு உத்தரவு வெளியானது. அதன்படி, மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா.

ரெயில்களில் நாளைமுதல் டிக்கெட் கட்டணம் உயர்வு

         தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ரெயில்களில் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் நாளை முதல் அதிகரிக்கிறது.
 

நாளை முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி அரை சதவீதம் உயர்வு

         தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.


திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

        திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

ரூ.80க்கு 'செக்' மாணவர்கள் 'ஷாக்'

           சேலம்:அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளில் பெண்கல்வி முக்கியத்துவம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. 
 

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.86 ஆயிரம் கோடி

        ''நாட்டிலேயே முதலிடம் வகிக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு, ஐந்து ஆண்டுகளில், 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்தார். 

தலைமையிடத்தில் தங்கி இருக்க வேண்டும்: மழையால் கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

         'தொடர் மழை எதிரொலியாக, பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும்' என, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இ-சேவை மையங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

      இ-சேவை மையங்கள் மூலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

        ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


பள்ளிகளில் கொண்டாட மட்டுமா 'குழந்தைகள் தினம்'?

      நவம்பர் 14- குழந்தைகள் தினம். சென்னை நகரில் பள்ளிகளில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பள்ளிப் படிப்பை பாதியில் துறந்த ராதா (12) எம்.ஆர்.டி.எஸ். மேம்பாலத்தின் கீழ் வாழ்வதற்காக கயிறு மேல் நடந்து கொண்டிருக்கிறாள்" இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 இருந்தென்ன பயன்? 6 முதல் 14 வயது குழந்தைகள் கல்வியை இலவசமாக பெறவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதுதவிர குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டமும் இருக்கின்றன. ஆனாலும், கல்வி இடை நிற்றல், குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினை இருந்துகொண்டே தான் இருக்கின்றன.

பைக்: மழைக்கால பராமரிப்பு

  • மழை காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கு சிக்கல் அதிகம். சில வழிமுறைகளை கையாண்டால், மழை காலத்தை கவலையின்றி எதிர்கொள்ளலாம். 
  • மழையில் நிறுத்த வேண்டியிருந்தால், சாவி துவாரத்தை மூட வேண்டும்; இல்லையெனில், பைக், ‘ஸ்டார்ட்’ ஆகாது 

குழந்தையின் எதிர்காலத்துக்கு... சூப்பரான சேமிப்புகள்!

‘‘க்ளையன்ட் ஒருவர், ‘பிள்ளைக்கு ஸீட் வாங்கறதுக்குள்ள படாதபாடா இருக்கு. மினிஸ்டர் லெவல் ரெகமெண்டேஷன் போனாலும் முடியல!’ என்று புலம்பினார். ‘எந்த காலேஜ்ல..?’ என்றேன். ‘அட, பிரீ.கேஜி. அடிமிஷன்ங்க!’ என்றார். ‘குழந்தைக்கு என்ன வயசு?’ என்றேன். 
 

குழந்தைகள் தினவிழா 2015 அனைத்துப் பள்ளிகளிலும் விழா அறிவுரை

        பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் : பள்ளிக்கல்வி - குழந்தைகள் தினவிழா 2015 அனைத்துப் பள்ளிகளிலும் அரசு சார்பாக விழா நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல் சார்பு 

பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு மூவகைச் சான்று: நடைமுறைச் சிக்கலால் ஆசிரியர்கள் தவிப்பு

      மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மூவகைச் சான்று பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச்சிக்கலால் சான்றுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

   நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.

மாணவரை மனிதக் கழிவை அகற்றச் சொன்னதாக ஆசிரியை பணி இடைநீக்கம் - கைது

         மாணவரை மனிதக் கழிவை கையால் எடுக்கச் சொன்ன நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், அவரைப் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டர்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

           தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.14) வழக்கமான விடுமுறை நாள் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த மழை காரணமாக இந்த வாரத்தில் வேலை நாள்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சில தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive