Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்
போனஸ் சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் : மத்திய அமைச்சரவை அனுமதி
எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?
* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
Tips for Blocking all Annoying Ads on Android Devices
இந்த அப் தான் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் செயல்திறன் அதிகம் பாதிக்கிறது
கலைப்பாட தொழில்நுட்பதேர்வில் மறுகூட்டல் தேவை
7th pay panel, OROP won't hurt govt's finances: Jayant Sinha
மாணவர்களுக்கு இலவச சுற்றுலா
நாசா செல்ல வாய்ப்பு தரும் 'சூப்பர் பிரெய்ன் சேலஞ்ச்'
கோ - ஆப்டெக்ஸில் ஜவுளி கடன் அதிகரிப்பு: அரசு துறைகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அனுமதி
CTET September 2015 Examination OMR Sheet Image & Answer key Declared
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா?
கலந்தாய்வில் 1.20 லட்சம் இடங்கள் காலி எதிரொலி: தமிழகத்தில் விற்பனைக்குத் தயாராகும் தனியார் பொறியியல் கல்லூரிகள்
6 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் குழந்தை பாதுகாப்பு ஊழியர் தவிப்பு
TNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?...எப்போது விடிவுகாலம் பிறக்கும்.?
ஆர்.கே. நகரில் புதிய அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடி நிதி - 2015/2016 கல்வியாண்டு முதல் செயல்படும் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
தீபாவளி போனஸ் 2 மடங்கு உயர்வு: உச்சவரம்பு ரூ.3,500-ல் இருந்து ரூ.7,000 ஆகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கலந்தாய்வில் 1.20 லட்சம் இடங்கள் காலி எதிரொலி: தமிழகத்தில் விற்பனைக்குத் தயாராகும் தனியார் பொறியியல் கல்லூரிகள்
கல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு
4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு
அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்
"வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'-அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு)தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது.அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.
இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு,அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு
போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும்எனத் தெரிகிறது.ரூ.10,000 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என சட்டவிதிகள் உள்ளன.
இந்த ஊதிய வரம்பை ரூ.21,000-ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல தற்போது ரூ.3,500-ஆக உள்ள போனஸ் உச்ச வரம்பை ரூ.7,500-ஆக உயர்த்தவும் அந்த மசோதாவில் வழி வகை செய்யப்படவுள்ளது.இந்நிலையில், போனஸ் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சட்டத் திருத்தம் அமலாக்கப்பட்டால், அதிக தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை கிடைக்கும்.
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 927 காலிப் பணியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்காக, 927 காலிப் பணியிடங்கள் உள்ளன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 26-இல் மாவட்டத்துக்குள்ளும், 27-இல் மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வுக்குப் பிறகு காலிப் பணியிட விவரங்கள் பெறப்படும். இதைத் தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவிஉயர்வு செய்வதற்கான இணைய வழியில் கலந்தாய்வு அக்டோபர் 30-இல் நடைபெறுகிறது.இந்த நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்காக 927 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிக அளவில் உள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
போனஸ் வரம்பு உயருமா? மத்திய அமைச்சரவை இன்று முடிவு
போனஸ் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும்எனத் தெரிகிறது.ரூ.10,000 வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என சட்டவிதிகள் உள்ளன.
இந்த ஊதிய வரம்பை ரூ.21,000-ஆக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதேபோல தற்போது ரூ.3,500-ஆக உள்ள போனஸ் உச்ச வரம்பை ரூ.7,500-ஆக உயர்த்தவும் அந்த மசோதாவில் வழி வகை செய்யப்படவுள்ளது.இந்நிலையில், போனஸ் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சட்டத் திருத்தம் அமலாக்கப்பட்டால், அதிக தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை கிடைக்கும்.