Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.


5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலப்பாடங்கள் ஒலி வடிவில்.

மாணவர்கள் சரியான உச்சரிப்புடன் வாசிக்க உதவும் என்ற நோக்கத்தில் பகிரப்படுகிறது.



குரல் : திருமதி.து.விஜயலட்சுமி, 

ஆங்கில ஆசிரியை, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 
கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு

பள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிமுறை மீறல், வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

கலை தேர்வுக்கு குறைந்தது மவுசு

அரசு தேர்வுத் துறை சார்பில், கலைப்பாட தொழில்நுட்ப தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படும். தென் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும்கேரளாவில் இருந்தும் இந்த தேர்வு எழுத தமிழகத்துக்கு வருவர்.

100 மருத்துவக் குறிப்புகள்... நோட் பண்ணுங்க!

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.


புது வாக்காளர் அட்டை தேர்தல் அதிகாரி தகவல்

''ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், புதிய அட்டை பெற விரும்பினால், அதற்கு, 001 என்ற தனி படிவம் அளிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

மாணவர் விடுதியில் 25 சமையலர் காலி பணியிடம்: அக்.30-க்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 14 ஆண் மற்றும் 11 பெண் சமையலர் பணியிடங்களுக்கு அக்டோபர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 


மேல்நிலை எழுத்தர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுத் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு

புதுச்சேரியில் நடைபெறவுள்ள மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான நுழைவு சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பணியாளர் நலத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார்.


தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.

தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-


மாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு?

மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 


கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஆசிரியர்களின் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை!

வங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. 


ராமநாதபுரத்தில் ரத்தாகின்றன 365 சத்துணவு அமைப்பாளர் இடங்கள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 365 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் ரத்தாகின்றன.தமிழகத்தில் 42,855 சத்துணவு மையங்களில் 30,925 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் காலியாக உள்ள அமைப்பாளர், 

விவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

வி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

CPS Subscription & Govt Contribution Fund - Interest Alloted equal to PF

       CPS-பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை மற்றும் அரசின் பங்களிப்பு தொகை அரசின் பொதுக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டு பொது வருகால வைப்பு நிதிக்கு இணையான வட்டி வழங்கப்படுகிறது -நிதி துறை பதில் 

  1. CPS Subscription & Govt Contribution Fund - Interest Allotted equal to PF - Click Here

 

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். 

அதேபோல், சென்னை தொழிலாளர் கமிஷனர் அலுவலகவாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிக்கு ஓட்டுனர் உரிமத்துடன், இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, www.labour.tn.gov.in இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை, தேனாம்பேட்டை; கோவை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் பின்புறம்; திருச்சி மான்னார்புரம், காஜா மியான் தெரு; மதுரை, எல்லீஸ் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடம் ஆகியவற்றில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திலும், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.“பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவ.,6ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்,” என, தொழிலாளர் ஆணையர் அமுதாதெரிவித்துள்ளார்.

வங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்

வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பதுஅமலுக்கு வந்துள்ளது.வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். 

இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போதுஇலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.

அறிவிப்பு இல்லை:

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிப்பது பற்றி, எந்த முன் அறிவிப்பும் இல்லை. வங்கியின் இணையதளங்களிலும் இது பற்றி குறிப்பிடவில்லை. வங்கிக்கு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு,எந்த நேரத்திலும் பண பரிவர்த்தனையை செய்யும் நோக்கில், ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவையை, வங்கிகள் தான் அறிமுகம் செய்தன.தற்போது அவற்றுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சேவை கட்டணத்தை தவிர்க்க, காசோலைகளுடன் மீண்டும் வங்கிக்கு செல்லும் நிலை ஏற்படும். வங்கிகளின் நவீன சேவைகள், வாடிக்கையாளர் மீது கட்டண சுமையை ஏற்படுத்துகின்றன. நான் கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கியில், இணையம் மூலம் செய்யும் பண பரிமாற்றத்துக்கு, சேவை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மருந்து கடைகள் நாளை 'ஸ்டிரைக்': இன்றே மருந்து வாங்குங்க...

நாடு முழுவதும், மருந்து வணிகர்கள் நாளை, 'ஸ்டிரைக்' நடத்துவதால்,பொதுமக்கள், தேவையான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

'ஆன் - லைன்' வழிமருந்து விற்பனையை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'இது, ஏற்கனவே உள்ள மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தைபாதிக்கும். தரமற்ற, போலி மருந்துகள் வரத்துக்கும் வழி வகுக்கும்' எனக்கூறி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.மத்திய அரசின் முயற்சியை கைவிடக்கோரி, நாளை, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.இதனால், எட்டு லட்சம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன. 'தமிழகத்தில் உள்ள, 30 ஆயிரம் மருந்து கடைகளும், இன்று இரவு, 12:00 மணி முதல், நாளைநள்ளிரவு, 12:00 மணி வரை, 24 மணி நேரத்திற்கு மூடப்படும்'என, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்க இன்று முதல் சிறப்பு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்குவது தொடர்பான சிறப்புக் கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(அக்.13) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இம்மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்குதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆணை வழங்குதல் தொடர்பான சிறப்பு கூட்டமர்வு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.

தக்கலைகல்வி மாவட்டத்துக்கு தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.14 ஆம் தேதியும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.15ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டமர்வு நடைபெறும்.அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் உரிய படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து இணைப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல புதிய வழிமுறைகளை கையாள வேண்டும்: கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு பாது காப்பாக எடுத்துச்செல்ல புதிய முறையை கையாள வேண்டும் என கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருச்சி மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத் தலைவர் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 8.3.2010-ல் பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 262 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக கோவைக்கு தபாலில் அனுப்பியபோதுஅவை மாயமாயின. இதனால் அந்த 262 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது.பொதுத் தேர்வு விடைத்தாள் களை திருத்தும் மையங்களுக்கு அனுப்பும்போது அதிகாரிகள் கவனக்குறைவுடன் உள்ளனர். தபால்களுடன் சேர்த்தும், தனியார் பஸ்களிலும் பிற தபால்களுடன் சேர்த்து அனுப்புகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிர்மலாராணி வாதிட்டார். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆனந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை விளக்கியிருந்தார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: தேர்வுத்தாள் மாய மானது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தேர்வுத் தாள் மாயமாகும்போது தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, பொதுத் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை திருத்தும் மையங் களுக்கு மிகுந்த பாதுகாப் புடன் எடுத்துச் செல்ல வேண்டும். இதற் காக புதிய வழிமுறைகளை உரு வாக்கி அமல்படுத்த வேண்டும்.இந்த வழக்கில் மறுதேர்வு எழு திய மாணவர்களுக்கு இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவை சம்பந்தப்பட்ட மாண வர்கள் தாக்கல் செய்யவில்லை. இழப்பீட்டுக்காக சம்பந்தப்பட்ட மாணவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைவராக கே.அருள்மொழி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.

தமிழக அரசு தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்றிரவு வெளியிட்டுள்ளஅரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் பதவியேற்ற காலத்தில் இருந்துஇன்னும் 6 ஆண்டுகளோ அல்லது அவரது 62 வயது வரையிலோ அவர் இந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IAS குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம்வரவேற்பு

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது.இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம்கூறியதாவது:

இந்த ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.63 லட்சம் பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 71 நகரங்களில் உள்ள 2,186 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 50 நாள்களுக்குள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆஷிம் குரானா தெரிவித்தார்.இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

       கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது? இதோ பட்டியல்

இனி 90% மதிப்பிற்கு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்

      ரிசர்வ் வங்கி அறிவித்த ஒரு அறிவிப்பு ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தரலாம்.

ஆயுளை நீளச் செய்யும் சைக்கிள் பயணம்: 74 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் ஆறு மாதம் அதிகமாக வாழலாம்

ஆயுளை நீளச் செய்யும் சைக்கிள் பயணம்: 74 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் ஆறு மாதம் அதிகமாக வாழலாம்


வாரத்துக்கு 74 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் ஆறு மாதம் அதிகமாக வாழலாம் என நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

TNPSC :தமிழ்நாடு அரசு துறைகளில் 1863 உதவியாளர், இளநிலை கூட்டுறவு கணக்காளர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

      தமிழ்நாடு அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைந்த நேர்முகத் தேர்வு இல்லாத 1863 குரூப்-2 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வுநடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

         முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive