Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
TNTET Paper 2 - Previous Year Questions Free Online Tests
Paper 2 [2012 Previous Year Questions - Free Online Tests]
English Medium
- TNTET Paper2 Free Online Test For 2012 - 1st Exam (English Medium - Maths & Science) - Click Here
- TNTET Paper2 Free Online Test For 2012 - 1st Exam (English Medium - Social Science) - Click Here
Tamil Medium
TNTET Paper 1 - Previous Year Questions Free Online Tests
Paper 1 [2012 Previous Year Question Free Online Tests]
பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.
ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை.
ஆசிரியர்கலந்தாய்விற்கு பிறகு விதிகளை மீறி பணி மாறுதல், பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
நடத்தினர்.தேனி மாவட்ட தொடக்க கல்வித் துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு
கடந்த மாதம் நடந்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள் - முதல்வர் ஜெயலலிதா
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்
என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர்
புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - அமைச்சர் கே.சி.வீரமணி
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும்
கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர்
கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித
நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வந்தனர்.
இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு
பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு
சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி
நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை
ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி,
தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை
கண்டுபிடித்துள்ளனர்.
தேசிய மல்யுத்தம்பழநி வீரருக்கு தங்கம்
தேசியஅளவிலான மல்யுத்தப் போட்டியில் பழநியாண்டவர் கலை கல்லுாரி மாணவர்
பி.பிரதீப்குமார் தங்கம் வென்றார்.இவர் திருச்சி யில் நடந்த தேசிய அளவிலான
மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்று
உள்ளார்.
இதன்மூலம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியா
சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவரை கல்லுாரி முதல்வர்
அன்புச்செல்வி, வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன் மற்றும்
பேராசிரியர்கள் பாராட்டினர்
ரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம்
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு
பேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு
வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call
Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள்
உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI
கருத்துகேட்டிருந்தது.
அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
சென்னை,செப்.23 (டி.என்.எஸ்) பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்,
என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது
விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த
நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்!!!
அனைத்துக் காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து!
போதிய உபகரணம் இல்லாததால், கோவை மண்டலத்தில், மூன்று கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 521 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இணையதளம் நாளை துவக்கம்:
அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை
துவக்கப்படுகிறது. கலாமின், ஐந்து திட்ட செயல்பாடுகளை சிறப்பாக
செயல்படுத்தியோருக்கு அக்., 15ம் தேதி 'அப்துல் கலாம் சேவை ரத்னா' விருது
வழங்கப்படுகிறது.
யு.ஜி.சி., அங்கீகாரத்துடன் 88 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை
பல்கலைக்கழக
மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது;
மொத்தம், 88 படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.
1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி
பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள்
நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின்
ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு
தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன.
அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை
பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
தரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா?
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான
கூடுதல்வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம்
நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள
மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை
ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது.