Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சட்டப் படிப்பு கலந்தாய்வு நிறைவு: 300-க்கும் மேற்பட்ட இடங்கள் காலி

மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நிறைவுற்றது. தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1,252 இடங்களுக்காக நடைபெற்ற கலந்தாய்வில் 300க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணி

இந்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிர் இழப்பு ஏற்படலாம்?

வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான்.

கோவை மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்


       தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனமும் இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியை சென்ற சனிக்கிழமை 12-09-2015-இல் கோவை சித்தாபுதூர்  மாநராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள 100க்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 6,7 & 8 வகுப்புகளுக்கான பிரிவில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ம.அருண்குமார் (8ஆம் வகுப்பு ), ர.கோகுல்(7ஆம் வகுப்பு), வே.சீனிவாசன்(6ஆம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்ற குழு முதலிடம் பெற்றது.இம்மாணவர்கள் அடுத்த கட்டமாக மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். 

CCERT PUPPET TRAINING

பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை: வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

கட்டாயப் பணி மாறுதல் மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP Download via Android App!


          2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

CPS & GPF Android App!


அரசு பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.

            மாவட்டம் வாரியாக அரசு பள்ளிகளில், காலியாகஉள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து, பள்ளி கல்வித்துறை விவரம் சேகரிக்கிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் நடந்தது.


சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

       ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் 'ஏழாவது மனிதன்'!

          மச்சம் உள்ளவனுக்கு மத்திய அரசில் வேலை' என்று புதிதாகச் சொலவடைஉருவானாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஆணையம் வந்து 'ஊத' வைத்துவிடுகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு இதில் ஏக்கமும் பொறாமையும் இருந்தாலும், 'இதர வருவாய் இனங்கள்'என்று பார்த்தால் மாநில அரசு ஊழியர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (நம்மைச் சொல்லுங்கள் அன்றாடங்காய்ச்சி!)


தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி

       மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
 

தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
  இந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன.
பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. இதுபோல அலுவலகங்கள், வீடுகளில் வை–பை வசதிகள் தாராளமாக வந்துவிட்டன.
 

மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க கற்றலில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த யோசனை

     பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
 

பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாதிக்கப்படுமா?

       ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுவதால், காலாண்டு தேர்வுக்கு, மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் - எஸ்.எஸ்.ஏ., சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; வேலை நாட்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்

       தமிழகத்தில் உள்ள, 42 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். விதிமுறைப்படி, இந்த மையங்களில், தலா, 42 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் என, 1.26 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 84 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்; 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு

         இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ். இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான (2014-15) கண்காட்சியில் சாதனை படைத்து, தேசிய கண்காட்சிக்கு தேர்வு கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்: 522 அஞ்சலகங்களில்ஆன்லைன் ஷாப்பிங் வசதி - பொதுமக்களிடம் வரவேற்பு

         தமிழகத்தில் பரிசோதனை அடிப் படையில் 522 அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய் யும் திட்டம் நடைமுறைக்கு வந் துள்ளது.அஞ்சல் துறையை லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை, எம்விகர்ஷா என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.


அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

       தமிழகத்தில் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க, 'லஞ்ச புகார் மையம்' அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை திருமலாபுரம் டி.கொடிமங்கலத்தைச் சேர்ந்த பி.சடையாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


புதிய கேஸ் இணைப்பு எடுக்க இன்டர்நெட் மூலம் எளிய வழி

          புதிதாக கேஸ் இணைப்பு எடுப்பதற்கு அரசு ஒரு எளிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஷாகஜ் எல்பிஜி திட்டம் (Sahaj LPG)


இது கேஸ் இணைப்பு பெறுவதில் எமது சொந்த அனுபவம்.

12th Computer Science Study Material

10th English Study Material

Special TET / PGTRB - PET Exam Study Material

PET - Study Materials Model Question Paper & Answer Keys.
Prepared by Mr. P. Saravanan, PET

12th Computer Science Study Materials

New Materials:
Prepared by
Mr. P.CHANRASEKARAN M.C.A, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE] &
Mr. T.SANKARA SUBBU M.SC, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE]


Annamalai University B.Ed Admission -Last Dt-30.09.2015

நடையால் ஆரோக்கியமா? ஆரோக்கியத்தால் நடையா!"


1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு

          பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ,  மாணவியருக்கு விளக்க வேண்டும்.  பள்ளிகளில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் பயன்படுத்த செய்ய வேண்டும். 

TNPSC சார்பில் மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு

       மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 3 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி  நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மகப்பேறு மற்றும் குழந்தை நல சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 89 காலி  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.  

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive