Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்காணல்: திருநங்கையை அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

          காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வில் திருநங்கையை அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

நாகை, நாமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

        வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று(08-09-15)உள்ளூர் விடுமுறை அளித்து நாகை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்வாடிதர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

செய்முறை வழிகாட்டி வராததால் 10 ம் வகுப்பு ஆசிரியர்கள் தவிப்பு

      பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 10 ம் வகுப்பு வழிகாட்டிவராததால், ஆசிரியர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வும், 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் எழுத வேண்டும்.

ஒப்பந்த ஆசிரியர் நியமனம் அணுமின் நிலையம் ஏற்பாடு.

      கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி அரசு பள்ளிகளில், காலி பணியிடங்களில்,தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, சென்னை அணுமின் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் இயங்கி வரும் பள்ளிகளில், அறிவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது. 

பள்ளி மாணவர்களுக்கான கடிதப் போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

          பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய புள்ளியியல் பணி தேர்வில் அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி மாணவர் சாதனை

      மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிளஸ் 2 துணை தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

       பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மழை பெய்யலாம் குடையுடன் போங்க!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
        வெப்பச் சலனத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், மாலை அல்லது இரவு நேரத்தில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். 

ஆதார் எண் கொடுத்தால்தான் பேராசிரியர்களுக்கு ஊதியம்! கல்லூரிகள் எச்சரிக்கையால் சிக்கல்

        உச்ச நீதிமன்றம் "ஆதார் எண் கட்டாயமல்ல' எனக் கூறி வந்தபோதிலும், ஆதார் எண் கொடுத்தால்தான் ஊதியம் என சில தமிழக பொறியியல் கல்லூரிகள் கூறியிருப்பது பேராசிரியர்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

ஈடேறுமா 'நூறு' கனவு:இன்று உலக எழுத்தறிவு தினம்

       ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

கண்ணுக்கு கண்ணாக... இன்று தேசிய கண் தான தினம்...

ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்வையின்றி தவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானமளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் கண்ணுக்கு கண்ணாக இருந்து ஒளி ஏற்றலாம். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண் தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வயது குறைப்பு

        மத்திய அரசின், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜன., 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக நலன் மற்றும் தேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனி நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அஞ்சல் வழிக்கல்வி நுழைவுத் தேர்வு 'ரிசல்ட்'

       அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மையம் மூலம் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், எம்.பி.ஏ., சேருவதற்கான, தொலைதுாரக் கல்வி நுழைவுத் தேர்வு, ஆகஸ்ட், 30ல் நடந்தது. 

ஆசிரியர்களுக்காக 'மொபைல் ஆப்': ம.பி.-யில் அறிமுகம்

      நாட்டிலேயே முதன்முறையாக தம் மாநில ஆசிரியர்களுக்காக ஒரு 'மொபைல் ஆப்' மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'எம் ஷிக்ஷா மித்ரா (கைபேசி கல்வி நண்பன்)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப், அவர்களுக்கு பணி நிமித்தமான விஷயங்களில் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ள நோட்டுகளை தடுக்க புதிய 7 ரகசிய அடையாளங்கள்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை


கள்ள நோட்டுகளை தடுக்க புதிய 7 ரகசிய அடையாளங்கள்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

    நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் பாங்கிக்கு புகார்கள் வந்துள்ளன. வங்கி ஏ.டி.எம்.களில் எடுக்கும் பணத்திலும் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 

ஆன்லைனில் ஈசியாக "பான் கார்ட்" பெற வேண்டுமா? - கட்டணம் வெறும் ரூ.106

வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலை செய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். 

தருமபுரியில் கல்வி தரத்தை மேம்படுத்த அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

    தருமபுரியில் கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் இருப்பதால் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


ஆய்வக வசதி இல்லாத அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள்: செய்முறைத் தேர்வுக்கு மாணவர்கள் தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் பரிதாபம்

         அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாமல்செயல்பட்டு வருவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளின் தயவை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மிக விரைவில்?

       தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர். 
 

அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் 2 மடங்கு மாணவர்கள்!

   மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
 

ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளி இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்.

          இந்திய வம்சாவளி சிறுமி லிடியா பாஸ்டின்(12), லண்டனில் நடைபெற்ற 'மென்ஸா அறிவுக்கூர்மை போட்டியில் 162 புள்ளிகள் பெற்று, இயற்பியல் வல்லுனர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்னுக்குதள்ளி முதலிடம் பெற்றார். 

'குழந்தை நல பரிசு பெட்டகம்' அடுத்த அம்மா திட்டம்

       அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, நகராட்சி மருந்தகங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
 

கல்வியில் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிப்பு: இந்திய மாணவர்கள் சங்க மாநாட்டில் கண்டனம்

        கல்வியில் மாநில அரசுகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு பறித்து வருவதாக, புதுச்சேரியில் நடந்த இந்திய மாணவர்கள் சங்க மாநாட்டில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Income Tax 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees with regard to payment of Income Tax for the financial year 2014-15 (Assessment Year 2016-17)

       Salaried Employees are a relieved lot now after fulfiling all the formalities for Income Tax 2014-15. But, by that time six months in the new financial year 2015-16 is already over.

Central Government considers extending maternity leave to boost child nutrition

        The government is considering extending maternity leave to 24 weeks from 12 weeks, a government official said on Friday, adding that it would encourage more women to breastfeed and help reduce high rates of child malnutrition in the country.

டி.ஆர்.பி., - விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்

          அரசு சட்டக் கல்லுாரிகளில், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு சட்டக் கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது.
 

சிவில் சர்வீசஸ் தேர்வு அரசு இலவச பயிற்சி

        சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு, இலவசப் பயிற்சி பெற, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், நுழைவுத்தேர்வு அறிவித்துள்ளது.
 

ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி இன்று திறப்பு

     புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை (செப்டம்பர் 7) திறக்கப்படுகிறது. புதிய கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார். 
 

"ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தமிழ் பாடத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை'



   தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.எஸ்.சி.இ. பள்ளி கவுன்சிலின் தலைமைச் செயலாளர் ஜெர்ரி அராத்தூன் கூறினார்.
 

அரசுப் பள்ளிகள் - தனியார் பள்ளிகள் : ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை - ஓர் ஒப்பீடு

       மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 ஆகும்.

எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத நல்லாசிரியர் விருது ஊக்கத்தொகை

        "கடந்த எட்டு ஆண்டுகளாக நல்லாசிரியர் ஊக்கத்தொகை உயர்த்தப்படாததால், தொகையை உயர்த்தி வழங்க'' அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக ஆண்டுதோறும் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக்., மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சிறந்த கல்வி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

பிஎப் சந்தாதாரர்களுக்கு அதிகபட்ச காப்பீடு ரூ.5.5 லட்சமாக உயர்கிறது

       பிஎப் காப்பீடு தொகை ரூ.5.5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ), 6  கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. தற்போது தொழிலாளர் டெபாசிட் தொகையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தில் அதிகபட்ச காப்பீடு ரூ.3.6 லட்சமாக உள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive