Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
40 தலைமை ஆசிரியர்களுக்கு DEO பதவி உயர்வு செப்.7 முதல் 19 வரை பயிற்சி
தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு
இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்
பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தள்ளாடுது எஸ்.எஸ்.ஏ. சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வித் திட்டங்களுக்கு விரயமாகிறதா மத்திய அரசு நிதி
மதுரை:கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர்
கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும்
நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,)
ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த
இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில
அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
தேர்வு துறை இணையதளத்தில் தனியார் நிறுவனத்துக்கு 'லிங்க்'
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளை நடத்தும், அரசு தேர்வுகள் துறை இணையதளம், தனியார்
நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், தேர்வு மற்றும் துறை ரீதியான
ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது.
அண்ணாமலை பல்கலை 'தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்'
அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர்
ஆறுமுகம், தாக்கல் செய்த மனு:யு.ஜி.சி., உத்தரவுப்படி, 1979 - 80ல்,
அண்ணாமலை பல்கலையில், தொலைதுார கல்வி துவங்கப்பட்டது. நாடு முழுவதும், 89
மையங்கள் மூலம், தொலைதுார கல்வி வழங்கி வருகிறோம். கடந்த மாதம், 14ம் தேதி,
டில்லியில் உள்ள, யு.ஜி.சி.,யின் தொலைதுார கல்வி அமைப்பு, எங்களுக்கு ஒரு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்
தமிழகத்தில்
இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர்
என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்று முதல் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (செப்.1) தொடங்க உள்ளன.
எம்.பி.பி.எஸ். 3-ஆம் கட்டக் கலந்தாய்வு எப்போது?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு
செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என அதிகாரிகள்
தெரிவித்தனர். சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257
எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின்
தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்திலும் மாணவர்
சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
சித்தா கலந்தாய்வு எப்போது?
தமிழகத்தில் சித்தா,
ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்காக, ஆறு அரசு
மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில்,
1,143 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள, 1,479 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி, ஜூலை, 31ல் முடிந்தது; 5,100 பேர்
விண்ணப்பித்து உள்ளனர்.
10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு; அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற செப்.,02 அன்று காலை 10.00 மணி முதல் செப்.,09 வரை தாங்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுமுதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
பிஎப் கணக்கில் இருப்புத் தொகையை இனி செல்போனிலேயே அறியலாம்
பிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா
விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண்
வழங்கப்பட்டு வருகிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி
முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:
10th English Study Material
English Study Material
- English Prose & Grammer Mini Notes | Mr. T.BALAGANESAN - Click Here
- All Other Subjects 10th Study Material - Click Here
ஆசிரியர்கள் வருங்கால வைப்புநிதியில் முன்பணம் பெற முடியாமல் தவிப்பு.
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியில் இருந்து முன்பணம் பெற முடியாமல் தவித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னையில் தோன்றிய பிளட் மூன்: பேரழிவுக்கு எச்சரிக்கையா?
‘பிளட் மூன்’ என்பது பொதுவாக பேரழிவிற்கு எச்சரிக்கையளிக்கும் கடவுளின்குறியீடாக பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களால் கருதப்படுகிறது.
"ONLINE" பதிந்து, புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதி!
பள்ளிக்கல்வி - பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்களை "தமிழ்நாடு பாடநூல் கழகம்" இணையதளத்தில் "ONLINE" பதிந்து, புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் செயல்முறைகள்
ரூ.16 கோடியில் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில்
நடப்புஆண்டில் 16 கோடி ரூபாய் செலவில் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும்
என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்தை அறிய செல்போன் செயலி: ஸ்டாலின் தொடங்கினார்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில்
கூறியிருப்பதாவது:மக்களோடு என்றும் தொடர்பில் இருக்கும் நோக்கத்தில்
M.K.Stalin என்ற செல்போன் செயலி சேவையை நான் தொடங்குகிறேன்.
தலைமை ஆசிரியர்கள் போராட முடிவு
அரசின் இலவச நலத்திட்டத்திற்கு தனி உதவியாளர் மற்றும் ஆதார் அட்டை பணியை வருவாய்துறையினரிடம் ஒப்படைக்க கோரி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட முடிவு செய்துள்ளனர்.
பலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட் மையங்களில் ஆசிரியர்கள் தவம்
அரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.
கனவாகும் மலைப்பகுதி கிராம கல்வி: ஆசிரியர் நியமனத்துக்கு யோசனை
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மலைகிராம குழந்தைகளுக்கு, முழுமையான கல்வி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் மலைகிராம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.
CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா?
எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது வென்றவர்கள் விவரம்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு 9 பிரிவுகளில் புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற 9 ஆசிரியர்கள் யார்? யார்? என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? TATA
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மற்றும் சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.
மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு
முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில்
கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறைக்கு உட்பட்ட அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி
ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மேலும் சர்பிளஸ் பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.