Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்

        யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதவுள்ளனர். கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், 'சிசாட்' என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. 

தேசிய அளவிலான கற்பித்தல் போட்டி: நீலகிரி அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கற்பித்தல் போட்டிக்கு, நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (33). இவர், தேனாடு அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 

 
 
 
 

சட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் 31-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

        தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.

வாட்ஸ் அப் டிப்ஸ்

Image result for whatsapp   வாட்ஸ் அப் செயலி தொடர்ந்து தன் பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது போன்ற புதிய வசதிகள், பலரை இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது. இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.


TET Teachers Appointment - கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

         கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.
 

14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

          அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் : பணி நிரவலில் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

             தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376 பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?:

        இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை  கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்

          டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ., முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த, வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.
 

வகுப்பு புறக்கணிப்பு: பேராசிரியர்கள் முடிவு

         அரசு கல்லுாரிகளில் பணியாற்றும், 2,000 பேராசிரியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
 

கணினி மூலமே வருமான வரி 80 வயதினருக்கு உத்தரவு

       வருமான வரி கணக்கை, கணினி மூலம் தாக்கல் செய்வது, 80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

        'மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

1,000 சிறப்பு பேராசிரியர்கள் நியமனம் யு.ஜி.சி., துணைத்தலைவர் பேச்சு

        உயர்கல்வியை மேம்படுத்த ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) துணைத்தலைவர் தேவராஜ் கூறினார்.

2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்

          டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ., முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த, வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.

பெண் குழந்தை 'ஸ்காலர்ஷிப்' செப்., 30க்குள் விண்ணப்பம்

         'மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ.,யின், ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை பெற, செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC : புள்ளியியல், அறநிலையத்துறையில் 171 பேருக்கு 31ல் 'இன்டர்வியூ'

           புள்ளியியல் உதவி இயக்குனர் மற்றும் அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு, வரும், 31ம் தேதி நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை

பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க, விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. 

சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்

          சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

     கடந்த 18-ஆம் தேதி இந்திய-சீன எல்லை கண்காணிப்பின்போது, தவாங் மாவட்டத்தில் ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற மலையில் இருந்து மற்றொரு மலைக்கு வான்வழி கம்பி வடம் அமைக்கும் பணியில் அண்ணாமலையும், அவரது குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.
 

முதுநிலை சட்டப் படிப்பு: ஆக.26-இல் கலந்தாய்வு

        அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு (எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதுகுறித்து சட்டக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

பட்டப்படிப்பு பாடமாகிறது என்.எஸ்.எஸ்.,

        நாட்டு நல பணித்திட்டம் என்ற, தேசிய மாணவர் இயக்க திட்டமான என்.எஸ்.எஸ்., பற்றி கல்லுாரிகளில், விருப்ப பாடமாக எடுக்க, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை

        ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும், 28ம் தேதி, ஒரு நாள் மட்டும் கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, செப்., 12ம் தேதி, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல்

        ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள்

        வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு

      2015 முதல் 2018 வரை அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப் பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு

        வாழ்நாள் சான்று அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ஏடிஎம்முக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல அஞ்சல் தலைவர் தகவல்

       அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:

மாநகராட்சிப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தாமதம்:

    சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன.சென்னை மாநகராட்சி சார்பில் 32 மேல்நிலைப் பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்போது 2 ஆண்டுகள் ஆகியும் 13 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதம் ஜூலை: அமெரிக்க விஞ்ஞானிகள்

      பூமியின் வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும் சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரும் விண்கல் பூமியின் மேல் மோதுகிறதா?: இணையத்தில் வேகமாக பரவும் வதந்திக்கு நாசா பதில்.

         அடுத்த மாதம் செப்டம்பர் 15 - 28 ஆகிய தேதிகளுக்குள் மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாகவும், இந்த சம்பவத்தால், பூமியில் மிகப்பெரும் சேதம் ஏற்படும் என்று கடந்த சில தினங்களாக இணைய பதிவுகளிலும் பிளாக்குகளிலும் தகவல்கள் பரவி வருகிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive