கட்டுமானப் பணிகளை முடித்து ஒப்படைக்க,
இ.எஸ்.ஐ., இயக்குனரகம் சம்மதித்துள்ளதால், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக்
கல்லுாரியை, தமிழக அரசு ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில்,
சென்னை மற்றும் கோவையிலும், நாடு முழுவதும், 13 இடங்களிலும், இ.எஸ்.ஐ.,
மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் நிர்வகிக்க முடியாமல்
திணறிய, இ.எஸ்.ஐ., இயக்குனரகம், கல்லுாரிகளை இழுத்து மூட முடிவு செய்தது.