Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உடல் சார்ந்த விழிப்புணர்வுக்காக பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த உத்தரவு

     வளர் இளம் பருவத்தினருக்கு உடல், மனம் சார்ந்த மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 5,748 உயர்நிலைப் பள்ளிகளில் குமரப் பருவ மன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பி.இ. சேர்க்கை: வைப்புத்தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்

   பொறியியல் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. பொறியியல் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடத்தியது.

பொருட்கள் உள்ளே; மாணவர்கள் வெளியே!

  கோவை: தமிழக அரசின் நலத்திட்ட பொருட்களை, பள்ளிகளில் வைப்பதால் மாணவர்கள் வகுப்பறைகள் இன்றி அவதிப்படும் சூழல் எழுந்துள்ளது.

 

'எங்களை பதவி இறக்கம் செய்யுங்க': கெஞ்சும் தலைமை ஆசிரியர்கள்

     பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்

     இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ENGLISH LEARNING FOR PRIMARY CLASS

Some Important Words for Primary School Children:
A
a, about, above, across, act, active, activity, add, afraid, after, again, age, ago,agree, air, all, alone, along, already, always, am, amo unt, an, and, angry, another,answer, any, anyone, anything, anytime, appear, apple, are, area, arm, army,around, arrive, art, as, ask, at, attack, aunt, autumn, away.

4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,154 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர்ஜெயலலிதாசுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்து பேசியதாவது:

80 சதவீத இணையதள மருத்துவ தகவல்கள் நம்பகமானது இல்லை: மருத்துவர் எச்சரிக்கை

        இணையதளத்தில் உள்ள 80 சதவீத மருத்துவத் தகவல்கள் நம்பகமானது இல்லை என சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறினார்.

ஒப்பந்ததாரர்களே சத்துணவு மையத்துக்கு நேரடியாக முட்டை வினியோகிக்கும் திட்டம்

     தமிழகம் முழுவதும், சத்துணவு மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே நேரடியாக முட்டை வினியோகம் செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. எடை குறைவாக இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை திருப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில் வழங்கப்பட்டால் அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு

        எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு இடமாறுதல்

 தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் இடமாறுதல் வழங்கப்பட்டது.

பி.இ. சேர்க்கை: வைப்புத்தொகையை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்

     பொறியியல் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. பொறியியல் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடத்தியது.

TET நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

       ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்  தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

DEE - Transfer Counselling - கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை AEEO- க்கு தெரிவிக்க உத்தரவு!

        தொடக்கக் கல்வி - பள்ளி வேலை நாளன்று நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் முறையான தகவலை விண்ணப்பத்தின் மூலம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க இயக்குனர் உத்தரவு!

மாசம் பொறந்தா சம்பளம் கேட்கிறார்கள் ஆசிரியர்கள்

      மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

         சிவகங்கை:பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
 

'மது ஒழிக்க போராடும் மாணவர்கள் :தமிழ் ஒழிப்பை எதிர்த்து போராடலாம்'

      சென்னை:'மது ஒழிப்புக்காக போராடும் மாணவர்கள், தமிழ் ஒழிப்பை தொடர்ந்து செய்யும், கல்லுாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக போராட லாம்' என, எழுத்தாளர் சாருநிவேதிதா பேசினார்.

'ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'

          மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, http://scholarships.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

          பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.அதில்,  பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில்இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

4ம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை தர உத்தரவு

        எட்டாம் வகுப்பு படிக்கவில்லை' எனக்கூறி, கருணை வேலை அளிக்க மறுத்த, மின்வாரிய அதிகாரியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த, திருமணி ராஜா என்பவர், தாக்கல் செய்த மனு:கள்ளக்குறிச்சியில், மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய என் தாய், 2012 ஜூலையில் இறந்தார்.

அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

         தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்ஜினியரிங் மாணவரை பட்டை தீட்டும் அண்ணா பல்கலை

       அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ.,- பி.டெக்.,- எம்.இ.,- எம்.டெக்., ஆகிய படிப்புகளில், பிஎச்.டி., இல்லாமலேயே, ஆராய்ச்சிப் பாடம் துவங்கப்படுகிறது. இந்தப் புதிய திட்டம், எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்கு இந்த ஆண்டே அமலுக்கு வந்துள்ளது. 

தியாகிகளுக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

           தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சுதந்திர தினத்தை ஒட்டி, தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் ஆற்றிய உரையில் ஓய்வூதியம் உயர்வு தொடர்பான அறிவிப்பைவெளியிட்டார். அவர் பேசியது:


பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்17-ல் தொடக்கம்

         பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள்அதிகரிப்பு:பணி நிரவலை நோக்கி காலம் கடத்தும் நிலை

       அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாதந்தோறும் ரூ.பல லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளி களை போன்று உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
 

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

      தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜெயிக்க வைத்த வார்த்தை

நாட்டு மக்களிடை.ேய இந்த ஒற்றை வார்த்தை, தேசிய உணர்வைதட்டி எழுப்பியது. அது தான் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம். சுதந்திர போராட்டத்தின் போது இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது. 

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு.

       சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையில் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் பெட்ரோல் ரூ 1.27 ம் ,டீசல் ரூ 1.17 ம் விலை குறைக்கப்படுள்ளது.இந்த விலை குறைப்பு இன்று(ஆகஸ்ட் 15) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

DEE-Express pay order

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

    தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

வெளிநாடுகளில் கல்வி மையங்கள் கூடாது:பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

     'தொலைநிலை பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், தொலைதுார கல்வி மையங்கள் அமைக்கக் கூடாது' என, பல்கலை மானியக்குழுவான - யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக.17-இல் மறுகூட்டல் முடிவுகள்

       பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை ஆகஸ்ட் 17 முதல் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive