Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

             சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 86.66 லட்சமாக உயர்வு

           வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 ஆக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 86.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக தாய்சேய் நல அலுவலர் காலி பணியிடம் நிரப்புகிறது 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

         டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில் இதுவரை தாய்சேய் நல மருத்துவ அலுவலர் பணியிடங்கள்  நிரப்பட்டு வந்தன. முதல்முறையாக இந்த பணியிடங்களை நிரப்பி தருமாறு  சுகாதாரத்துறை டிஎன்பிஎஸ்சியை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து தாய் சேய்  நல மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. 

குரூப் 2 தேர்வு: ஆகஸ்ட் 5-இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

          குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
 

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் மதிப்பெண் சான்றிதழ்

           பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

          பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை சனிக்கிழமை (ஆக.1) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்

            மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.

Spouse Certificate

பெட்ரோல்,டீசல் விலை ரூ.4 குறைவு.

          பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலைக் குறைப்பு விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

TV Flash News:

*ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு

*மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 7.08.2015

விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்


விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்

      மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.

உடல் உறுப்புகளை தானமளியுங்கள்; ஓட்டுநர் உரிமம் பெறுங்கள்: விரைவில் வருகிறது புதிய நடைமுறை

   ஒருவர் தனக்கு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது, 'ஒரு வேளை தான் சாலை விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடல் உறுப்புகளையோ அல்லது உடல் திசுக்களோ தானமாக அளிக்கிறேன்' என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுவதை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அப்துல் கலாம் விருது

        "டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் "டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்

SSLC MARCH/APRIL 2016 DECLARATION FORMAT

அக்.15 இளைஞர் எழுச்சி நாள்; அப்துல் கலாம் பெயரில் விருது- தமிழகஅரசு அறிவிப்பு

            விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிபந்தனைகள்: கல்வித்துறை முடிவில் திடீர் மாற்றம்

        பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டம் எதிரொலியால் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்தாண்டு சேர்க்கப்பட்ட புதிய நிபந்தனைகளை தளர்த்திக்கொள்ள கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

   

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம் ?

       ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றி இருந்தால் போதும். கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனவும்,


அரசு அறிவித்த பிறகும் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி முற்றுகை

         அரசு அறிவித்த பிறகும் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் குமாரபாளையத்தில் ஆரம்ப பாடசாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு


       சென்னை: பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 19 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் கல்லூரியில் 19 உதவி பேராசிரியர்களை பல்வேறு தேதிகளில், சட்டவிதிகளை பின்பற்றி நியமித்தோம். 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்

        மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 19}ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்கு முதலுதவி பயிற்சி

         தமிழகத்தில், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியது.இதுகுறித்து, தமிழ்நாடு எலும்பு, முடநீக்கியல் நிபுணர் சங்க மாநிலத் தலைவர் ராஜா ரவிவர்மா கூறியதாவது:இந்தியாவில், சாலை விபத்துகளால், ஒரு மணி நேரத்துக்கு, 16 பேர் மரணம் அடைகின்றனர். 

இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

          இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி

        சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பார்வையற்றோர் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்

        மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். 

கலாம் பாடத்துடன் புதிய பி.இ., வகுப்பு துவக்கம் அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகள் ஏற்பாடு

        அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 534 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆகஸ்ட், 3ம் தேதி, புதிய வகுப்புகள் துவங்க உள்ளன. முதல் நாளில், முன்னாள் ஜனாதிபதியும், அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியருமான அப்துல் கலாமுக்கு அஞ்சலி மற்றும் அவரைப் பற்றி பாடம் நடத்தப்பட உள்ளது.

அப்துல் கலாம் அடக்கம் செய்யபட்ட இடத்தில் கூட்டம் கூடமாக அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

        12.15 மணிக்கு அப்துல் கலாமின் உடல் நல்லடக்கப் பணிகள் முடிந்தன. இதை யடுத்து உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் நிறைய மலர்கள் தூவினார்கள். அப் போது இஸ்லாமிய முறைப் படி அப்துல்கலாமின் உறவி னர்கள் பிரார்த்தனை செய் தனர்.

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

        வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்' என்று, அந்த சுற்றறிக்கையில், கணக்குத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

         பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive