Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் : முதல்கட்டமாக 10 ரூபாய் தாளில் சோதனை

       பிளாஸ்டிக் ரூபாய் தாள்களை சோதனை ரீதியில் பயன்படுத்தி பார்க்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் காந்தி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலில் 10 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும் என்றும் பிறகு படிப்படியாக மற்ற மதிப்பிலான பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய 5 நகரங்களில் பிளாஸ்டிக்ரூபாய் தாள்கள் சோதிக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது.

தங்கமகள் சேமிப்பு கணக்குகள் விவரம்: வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவு

         பெண் குழந்தைகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி கணக்குகள் பற்றிய விவரத்தை அளிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 

7th Central Pay Commission ல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.

         மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது.
 

வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்கள் மானியம்: செப்டம்பரில் தொடங்க மத்திய அரசு முடிவு

       சமையல் எரிவாயு மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்களின் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை செப்டம்பரில் மத்திய அரசு தொடங்கவுள்ளது.

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய வளையம் கண்டுபிடிப்பு

      சனிக்கோளின் வெளிப்புறத்தில் மிகப்பெரிய வளையம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இதுவே முன் எப்போதும் கண்டிராத நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் மிகப்பெரிய வளையம் ஆகும். 
 

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி

        அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி

        பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 
 

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்

      வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
 

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு: பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு

         காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிகளில் கட்டாய நீதிபோதனை வகுப்பு இருந்தது. இந்த வகுப்பில் மாணவர்களுக்கு அரிய பல விஷயங்களையும், நல்லொழுக்கம் தொடர்பான நீதிக் கதைகளும் பாடமாக நடத்தப்பட்டு வந்தன. இதுபோன்ற நீதிபோதனை வகுப்புகள் ஒரு மாணவரை நல்ல பழக்க வழக்கங்களுக்கு இழுத்துச் சென்றன. காலப்போக்கில் இந்தக் கல்வித் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

கல்வியால் சிறைபடாத மாணவச் செல்வங்கள்-முனைவர்.கெ.செல்லத்தாய்

       இன்றைய கல்வி என்பது கடைத் தெருவில் விற்கும் கத்தரிக்காய் ஆகிவிட்டது. கர்ப்பகிரகத்தில் இருக்கும் கடவுளை வணங்கலாமே தவிர, விற்பனை செய்யக் கூடாது. கேடில்லாத விழுச் செல்வம் கல்வி. இம்மைப் பயன்தருவது, அறியாமையை அறவே ஒழிக்கும்அற்புத மருந்து. கொடுக்கக் கொடுக்க குறையாது
 

ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

        தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

TNPSC : GROUP II INTERVIEW POSTS ORAL TEST LIST PUBLISHED

குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நேர்காணல் வரும் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Pay Order

       2012-13ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 900 புதிய முதுகலை ஆசிரியர் பணியடங்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை

June 2015 | 900 PG Post Pay order upto 30.6.15 - Click Here

வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி


வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி

    உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்கள் ரத்தானால் இ.டிக்கெட் கட்டணம் தானாக வந்து விடும்

Image result for indian railway photos
       விரைவு ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டால், கணினி மூலம் (இ.டிக்கெட்) முன் பதிவு செய்தோருக்கு முழு கட்டணமும் தாமாகவே வந்து விடும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது.
 

வேளாண். பல்கலையில் பட்டம் பெற்ற 155 விவசாயிகள்

      கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற 45-வது நிறுவன நாள் மற்றும் தொலைதூர கல்வி பட்டத் தகுதி பெறும் விழாவில் 155 விவசாயி கள் பட்டம் பெற்றனர்.
 

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்சுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரிப்பு

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்சுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரிப்பு
      சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 430 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
ஆனால் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து இருப்பதால் வழக்கம்போல் இந்த வருடமும் காலி இடங்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதர்களின் நினைவு திறனை மிக வேகமாக அழித்து வருகிறது இணையம் - ஆய்வில் அதிர்ச்சி


மனிதர்களின் நினைவு திறனை மிக வேகமாக அழித்து வருகிறது இணையம் - ஆய்வில் அதிர்ச்சி

       கடைசியாக எப்போது நீங்கள் ஒரு போன் எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர/ சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.

பள்ளி மாணவ மாணவியர்க்கான சிறுபான்மையினர் நலத்துறை வழங்கும் கல்வி உதவித்தொகை இணையதள முகவரி

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்க்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து OFFLINE ல் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

1,400 ஆசிரியர்கள் ராஜினாமா!

         பீகாரில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 1,400 தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ராஜினாமா.சட்ட நடவடிக்கையை தடுக்க ராஜினாமா செய்ய பாட்னா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதால் முடிவு.
 

TNPSC Maths Questions Study Material - Self Test 4


         TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!

TNPSC Maths Questions Study Material 

- LCM & GCD - Self Test 4

பரபரப்புக்கு பஞ்சமில்லாத உச்சநீதிமன்ற டிஇடி(TET) வழக்குகள்....ஒரு முன்னோட்டம்

          லாவன்யா மற்றும் சசிகலா மற்றும் பலர் ;தேர்வுக்கு பிந்தைய முன்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வினாலும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை என்னும் தவறான ஆசிரியர் தேர்வு முறை இருப்பதாக தொடர்ந்த உச்சநீதிமன்ற வழக்கு ஆசிரியர்கள் முதல் இன்றைய பி.எட் படிக்க போகும் பட்டதாரிகள் வரை பரப்பரப்பாக பேசப்படுகிறது....

ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.

        பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

நாடு முழுவதும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு திட்டம்.

        நாடெங்கிலும் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நாடா தெரிவித்துள்ளார்.
 

ஹெல்மெட் : பெண்கள்,பெண் குழந்தைகளுக்கு விலக்கு

        தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  
 

பிளஸ் 2-வுக்கு பிறகு: எந்தப் பொறியியல் பாடம் ஏற்றம் தரும்?

      சரியான பாடப்பிரிவைச் சரியான கல்லூரியில் தேர்ந்தெடுப்பதே கலந்தாய்வின் உண்மையான வெற்றி. கிடைக்கும் வாய்ப்புகளில் சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது சுலபத்தில் முடிந்துவிடும். ஆனால், சிறப்பான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கும்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive