Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில் புதிய சலுகைகள்.
பார்வைக்குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் |
பாதிக்கப்பட்டோர், சிவில் சர்வீஸ் முதல் நிலை மற்றும் பிரதான தேர்வெழுத, துணைக்கு ஆள்வைத்துக் கொள்ளலாம்' என, யு.பி.எஸ்.சி., கூறியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கை:சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர், 40 சதவீதம் வரை பார்வைக் குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
2 ஆண்டு பி.எட்., படிப்பு அமல்புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி.
தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு
பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டப்படி, ஜூலை முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியராக, பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக, எம்.எட்., படிக்க வேண்டும்.
ஆதார் அட்டை கேட்டு அரசு ஊழியர்களை அலைகழிப்பு செய்யும் கருவூலம்
அரசு ஊழியர்களின் ஆதார் எண் விவரங்களை அளித்தால் மட்டுமே சம்பள பட்டியல்
பெற்றுக் கொள்வோம் என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளது
அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை வளர்க்க புது முயற்சி: அஞ்சல் சேமிப்பு முன்னோடித் திட்டம் தொடக்கம்
சேலம்
மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு உயர்நிலைப்
பள்ளியில், திருக்குறள் மனப்பாடம் ஊக்குவிப்பு அஞ்சல் சேமிப்பு முன்னோடித்
திட்டம் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
அரசு காப்பீட்டு திட்டங்கள், ஒரு பார்வை
அனைத்து மக்களுக்கும் பரவலாக காப்பீடு சென்று அடைய வேண்டும் எனும்
நோக்கத்துடன் மத்திய அரசு சார்பில் மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசு காப்பீட்டு திட்டங்களை, பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல்
தனியார் வங்கிகளும் ஆர்வத்துடன் முன்வைத்து உறுப்பினர்களை சேர்த்து
வருகின்றன. இந்த திட்டங்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்கள் பற்றி ஒரு
பார்வை...
இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது!
இடைநிலை
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று
வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
அரசின்
நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப்
பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வித்துறை
நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு
கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும்
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில்
(ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர்
மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வேளாண் பல்கலை 'ரேங்க்' பட்டியல் வெளியீடு
கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. கோவை,
வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., விவசாயம்
உள்ளிட்ட, 13 வகையான பட்டப் படிப்புகளில், 2,340 இடங்கள் உள்ளன.இவற்றுக்கு, 29,942 மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர்.
பயிற்சி செலவீனங்கள் குறித்து - விவரம் கோருதல சார்பு
தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் 2015-2016 ஆண்டிற்கான வட்டார மற்றும் குருவள மையப்பயிற்சி - PAB Unit Cost Break Up - பயிற்சி செலவீனங்கள் குறித்து முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப்பிட கோருதல் சார்பு
போட்டித்தேர்வு புத்தகங்கள் குறித்த Soma Sundaram அவர்களின் அனுபவம் .
பொது அறிவுப்பகுதிக்கு 6
முதல் 10 வரை சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில மேல்நிலை பாடப்புத்தகங்கள்
மற்றும் இதோடு அரிஹந்த் ஜெனரல் நாலெட்ஜ் -2015 (eng ).இவையே போதும்
.இதிலிருந்து 40% வரை கேள்விகள் வந்து விடும் .அதாவது பொது அறிவு பகுதிக்கு
. எப்படி படிக்க வேண்டும் எனில் 6,7,8,9,10,11,12 ம் வகுப்பு வரிசையாக பாடங்களை படியுங்கள் .எடுத்த உடன் 10 க்கோ 12 கோ போகாதீர்கள் .