Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2015 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RH LIST)

ஜூன்
2-புத்த பூர்ணிமா /சாபே பராஅத்
19-இரமலான் நோன்பு தொடக்கம் (வெள்ளி)
ஜூலை
14-சாபே காதர் (செவ்வாய்)
ஆகஸ்டு
3-ஆடிப் பெருக்கு(திங்)
28-வரலட்சுமி நோன்பு, ஓணம் திருநாள் (வெள்ளி)

PAY CONTINUATION ORDERS FOR VARIOUS POSTS RELEASED

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறைபடுத்தி ஆணை வெளியீடு

      பள்ளிக்கல்வி - சார்நிலைப்பணி - 2010/11 ஆம் ஆண்டு அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறைபடுத்தி ஆணை வெளியீடு

சிறுபான்மை மொழி - ஆசிரியர்களுக்கு பணிவரன் முறைபடுத்தி ஆணை வெளியீடு

     பள்ளிக்கல்வி - சார்நிலைப்பணி - 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடியாக நியமிக்கப்பட்ட (சிறுபான்மை மொழி) ஆசிரியர்களுக்கு பணிவரன் முறைபடுத்தி ஆணை வெளியீடு

நியமன ஆணையில் திருத்தம் செய்து ஆணை

     ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2006-007ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அஉநிப/மேநி பள்ளிகளில் ஆங்கிலபாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்பட்டவர்கள் - நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணையில் திருத்தம் செய்து ஆணை வழங்குதல்

ஆய்வக உதவியாளர் நியமனம்: அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

      பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம் தகுதிகாண் மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


அரசு மருத்துவக் கல்லூரிகளில் பழைய மாணவர்கள் 520 பேருக்கு வாய்ப்பு

 எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் கட் ஆஃப்பில் முன்னிலையில்வந்துள்ள பழைய மாணவர்கள் 520 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு மொத்தமாக புத்தகம் வாங்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை

       11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆதிதிராவிடர் நலப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

   ஆதிதிராவிட பள்ளிகளில் இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான, 454 பேர்  தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ - ஐகோர்ட்டு

     ‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை தேர்வுத்துறை இணை இயக்குனரிடம் மாணவ-மாணவிகள் புகார்

  பிளஸ்-2 விடைத்தாள் மறு கூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை என்று மாணவ- மாணவிகள் நேற்று அரசு தேர்வுகள் இணை இயக்குனர் அமுதவல்லியிடம் புகார் தெரிவித்தனர்.


பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் உண்டா?

      தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், வரும், 21ம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், வரும், 22ம் தேதி தான் திறக்கப்படுகின்றன. எனவே, இந்த பள்ளி நிர்வாகிகளும் விழி பிதுங்கியுள்ளனர்.சர்வதேச யோகா தினம் குறித்து, தமிழக அரசிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு, இதுவரை அதிகாரபூர்வ வழிகாட்டுதல் வரவில்லை.


இளம் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

     முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்று நவீன ஆராய்ச்சி உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக இளம் பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வரவேற்றுள்ளது.


10ம் வகுப்பில் தேறாத மாணவி, பிளஸ் 2 தேர்வு எழுதியது எப்படி?

       பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, அதே பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து, தேர்வு எழுதி தோல்வியடைந்த விவகாரம், கரூர் மாவட்ட கல்வித்துறையில் பெரும் பிரச்னையாக கிளம்பியுள்ளது.கரூர் மாவட்டம், சோழவரம் பஞ்சாயத்துக்குட்பட்ட, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2013ல், மீனா என்ற மாணவி, ௧௦ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு முடிவு வெளியான போது, தமிழில், 44, ஆங்கிலத்தில், 22, கணிதத்தில், 35, அறிவியலில், 53, சமூக அறிவியலில், 35 மதிப்பெண் எடுத்து, தோல்வி அடைந்தார்.


ஆய்வக உதவியாளர் தேர்வு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தது பள்ளி கல்வித்துறை.

பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த 30ம் தேதி தேர்வு நடந்தது. இதில் 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இந்த தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுவிற்கு இன்று பதில் மனு தாக்கல் செய்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள மாட்டோம் நேர்முகத் தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் கொள்வேம் என கூறினார்.
இதற்கு நீதிபதி எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் எப்படி நேர்முகத் தேர்வுக்கு அழைப்பீர்கள் என கேட்டதற்கு அரசிடம் கேட்டு பதில் அளிப்பதாக கண்ணப்பன்  தெரிவித்தார்.

Jeevan Raksha Padak Series of awards 2015

School education-Recommendations for Jeevan Raksha Padak Series of awards 2015-Nominations called for Regarding...

Orders issued.

      LOANS AND ADVANCES BY THE STATE GOVERNMENT – Advances to Government Servants – Advance for Education of the Children of Government Employees – Further continuance of the Scheme for a further period of three years from 01-06-2015 – Orders issued.

கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன

          பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


"பாஸ்போடலைனா செத்துடுவோம்!' - அரசு பள்ளியில் அவலம்!

           "எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கவில்லை. எங்களை திட்டமிட்டு தேர்ச்சி பெறாமல் செய்துவிட்டார்கள். ஏன் எங்களை தேர்ச்சி பெறவைக்கவில்லை என கேட்டதற்கு, உங்களை துணி இல்லாமல் காவல்துறையிடம் அழைத்துச்செல்வோம் என்று கடுமையாக மிரட்டுகிறார்கள். அதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே இவ்விஷயத்தில் தலையிட்டு இன்று மாலை 4.30 மணிக்குள் பன்னிரெண்டாம் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வோம்.”

தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானம்

      கர்நாடகாவில், 7ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட, தகுதி தேர்வு நடத்த ஆலோசித்து வரும் கல்வித்துறை, தற்போது, ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை அறிய முன்வந்துள்ள கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது

TNEA 2015 Random Number Enquiry

குரூப் 1பதவிக்கு 10நாளில் தேர்வு அறிவிப்பு

          குரூப் 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும். குரூப்1 பதவிக்கு இன்னும் 10 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
 

STATE LEVEL SLAS DETAILS

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தரவரிசை வெளியீடு 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்து 17 பேர் முதலிடம்

           தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் எடுத்து 17 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 
 

பணப்பலனை திரும்ப ஒப்படைக்ககல்வித் துறை திடீர் உத்தரவு ஓய்வு தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி

              மதுரையில் தொடக்க பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்று பல ஆண்டுகளான நிலையில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பணப் பலன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் உத்தரவால் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடைத்தரகர்கள் வசூல் வேட்டை போலீசில் புகார் செய்ய முதல்வர்கள் முடிவு

           கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் 'சீட்' வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் பெற்றோரிடம் வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்ய கல்லூரி முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.கல்லூரிகளில், புதிய கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் தலைமுறை பட்டதாரியாக விரும்புவோர் 80 ஆயிரம்

        அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள, 1.54 லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர், முதல் தலைமுறை பட்டதாரியாக ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்.மொத்த விண்ணப்பதாரர்களில், மாணவர்கள், 95,300 பேர்; மாணவியர், 58,938 பேர்;
 

அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம்

          பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் முருகதாஸ் சிறப்புரையாற்றினார்.
 

தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்

            தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பணி நிறைவு ஆசிரியர்கள் ராமசாமி, செங்கோட்டையன், விஸ்வநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளர் நேரு ஆகியோர் பேசினார்.
 

வேளாண்மைப் படிப்புகளில் சேர 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 20-இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

      தமிழகத்தில் வேளாண்மைப் படிப்புகளில் சேர 29,825 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive