Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC : ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்

        அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு:காரைக்குடியில் ஜூன் 21ல் நடக்கிறது

      இளநிலை ஆராய்ச்சியாளர்,விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் 21ம் தேதி காரைக்குடியில் 'சிக்ரி' சார்பில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் நடக்கிறது.

கல்லூரியில் காலியிடங்களுக்கு சீட்டு போடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இழுபறி

        காரைக்குடி:அரசு அறிவியல் மற்றும் கலை கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

     சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி அரசுப் பள்ளியில் மாணவர், ஆசிரியர் விகிதம் 8:2.

              அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என கூறும் கல்வித் துறையின் கீழ்  இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், எட்டு மாணவர்களுக்கு, இரு ஆசிரியர் உட்பட நான்கு ஊழியர்கள் பணியாற்றும் கூத்து புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது. 

கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள்.

        கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள் சமஸ்திபுர்: பீகாரில், கல்லூரி தேர்வில், பங்கேற்ற மாணவர் மற்றும் மாணவிகள் புத்தகங்களை கொண்டு வந்து காப்பியிடித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். 

மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு.

         மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு புதுடில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன வழக்கில், வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. 

ஜூன் 15ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு!

        பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு  விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் பட்டியல் ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு

     மாண்புமிகு தமிழக முதலவர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்புக்கிணங்க அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி நகர மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு

Department Permission Application For Government Housing Loan

      வீடு கட்ட, அரசுக்கடன் பெற அரசுப் பணியாளர் துறை அனுமதி கோரும் விண்ணப்பம்
Thanks to Mr. Sambasivam.

வேளாண்மைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

    தமிழகத்தில், வேளாண்மைப் படிப்புகளில் சேர விண்ணப்பங்களை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 13) கடைசி நாளாகும். 

' இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'

      'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதல் கட்டக் கலந்தாய்வு: அரசு, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?

          தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்

          இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

MBBS "ரேண்டம் எண்" என்றால் என்ன ? எப்போது பயன்படுத்தப்படும்?

          எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது ஒரே கட்-ஆஃப் மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - வேதியியல் பாடங்களிலும் ஒரே மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப்படும் கணிதத்திலும் ஒரே மதிப்பெண், ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு எண் பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

பத்தாம் வகுப்பு: 18, 19-இல் அறிவியல் செய்முறைத் தேர்வு

       பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வின் அறிவியல் செய்முறைத் தேர்வு ஜுன் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி:

இப்படியும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! எம்.சேக்முஜிபுர் ரகுமான்

        தாராபுரம் அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி போதிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தங்களது சொந்த செலவில் செய்து வருகின்றனர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்.


ஜூலை 1ல் கவுன்சலிங்: ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை

        தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மொத்தம் 412 இயங்கி வருகின்றன. இவற்றில் 15000 இடங்கள் உள்ளன.  இவற்றில் 2300 இடங்கள் அரசு ஆசிரியர் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில்  இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த மாநில ஆசிரியர்  கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி) முடிவு செய்துள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம் 14ம் தேதி  வினியோகிக்கப்பட்டன. 

பள்ளியின் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவர் காயம்: மாடியில் இருந்து வேறு மாடிக்கு தாவியபோது சம்பவம்

   காஞ்சிபுரம் நகராட்சிப் பள்ளியில் புதன்கிழமை காலையில் ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து மற்றொரு கட்டடத்தின் மாடிக்குத் தாவியபோது, தவறிக் கீழே விழுந்த மாணவர் பலத்த காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

        காஞ்சிபுரம் இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர்  வி.கே. சண்முகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வகுப்பறையில் நெஞ்சுவலி 9ம் வகுப்பு மாணவன் பலி

            விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன்  முத்துமோகன் (15). இவர் ராஜபாளையத்தில்  உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்தார்.  வகுப்பறையில் இருந்த முத்துமோகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

பார்வையற்ற மாணவியருக்கு 'அட்மிஷன்:' அரசு உத்தரவு

  பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இருபாலர் பயிலும் இப்பள்ளியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பார்வையற்ற ஏழு மாணவியரை, பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க மறுத்துவிட்டனர்.
 

'கண்ணை கட்டுது' என்.எஸ்.எஸ்., திட்டம் 'கரையுது' பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி

       தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்பாடுகளுக்கு இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாததால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பி.டி.ஏ.,) நிதி மற்றும் திட்ட அலுவலர் கையில் இருந்து பணம் செலவிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

டாக்டர்கள் மருந்து சீட்டில்இனி கிறுக்க முடியாது

         நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது கட்டாயமாகிறது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி தங்களது இஷ்டம் போல் கிறுக்க முடியாது.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்கள்.

     ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள்  மட்டுமே இருப்பதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கப்பட்டு வருகிறது. பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 81 மாணவர்கள் படிக்கின்றனர். 

ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடித்தல் - "உறுதிமொழி"

     அகஇ - ஜூன் 12 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடித்தல் - "உறுதிமொழி" வெளியிட்டு இணைஇயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர்கள்திடீர் ஆர்ப்பாட்டம்.

       ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்கல் டிக்கெட்டுக்கு முன்பதிவு நேரம் மாற்றம்: ரத்து செய்தால் 50% கிடைக்கும்:

      தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. மேலும், ரத்து செய்யும் டிக்கெட்களுக்கு 50 சதவீத தொகையை திரும்பி அளிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.முன்கூட்டியே திட்டமிடாத நிலையில் திடீரென பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் டிக்கெட் முறைதான். இதனால், தட்கலில் டிக்கெட் வாங்க கடுமையான போட்டி நிலவுகிறது.
 

பேஸ்புக்கில் ஆபாச வீடியோவை பரப்பும் வைரஸ்…. எச்சரிக்கை ரிப்போர்ட்…

         சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது.இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சமூக வலைதளபயன்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வலைதள பயன்பாட்டாளர்கள் கூறுகையில் ,

இயக்குனர் உத்தரவு

         தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மேற்கொள்ளவும், 12 பள்ளிகள் பார்வையிடவும் இயக்குனர் உத்தரவு

கல்விக் கடன் வழங்க அலைக்கழிக்கும் வங்கிகள்!

         மேற்படிப்புக்கான கல்விக் கடன் வழங்குவதில், வங்கிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின், மேற்படிப்பு கனவு, கல்விக் கடன் வாயிலாக, நிறைவேறி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், கலை மற்றும் அறிவியல் உட்பட துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏதுவாக, கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த, 2013 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 பேரிடம் 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive