Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு

        மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன.  
 

அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்:பொன்ராஜ் தகவல்

          ராமேஸ்வரம்:“ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் சோலார் மின் விளக்கு பொருத்தப்பட உள்ளது,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
 

தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம்:தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் மீது புகார்

           திருச்சி:'தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு, மறு கூட்டல் முடிவு வெளியாவதில் காலதாமதம், வணிகவியல் பள்ளிகள் ஆசிரியர் பயிற்சி மையம் அமைவதில் முறைகேடு நடந்துள்ளது' என, தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம்

         கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர் இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிருப்தியில் ஆர்.எம்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்

         தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் அதிருப்தியில் உள்ளனர்.கல்வித் துறைக்கு உட்பட்ட இத்திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிதி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு தளர்வு: தாத்தாவும் சட்டம் படிக்கலாம்

            இனி, 90 வயது தாத்தா கூட சட்டப்படிப்பு படிக்கும் வகையில், வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், படிப்பு முடித்த பின், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றால், வழக்கறிஞர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.வினியோகம்:தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில், வரும் கல்வியாண்டுக்கான, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த, 5ம் தேதி துவங்கியது. முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு, நேற்று முதல், விண்ணப்ப வினியோகம் துவங்கியது.

கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி

    தமிழகத்தில் கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) மாணவர்கள் சேருவதற்கு நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிக்க புதன்கிழமை (ஜூன் 10) கடைசி நாளாகும்.

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது சில நாள்கள் தாமதமாகும் என்று தெரிகிறது.

ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிக்கு கிடைத்தது அனுமதிஎம்.பி.பி.எஸ்., இடங்கள் 2,655 ஆக உயர்வு

         தமிழக அரசு புதிதாக துவக்கிய, ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, மத்திய அரசின் முறையான அனுமதி கிடைத்துள்ளது. புதிதாக, 100 இடங்கள் சேர்வதால், அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,665 ஆக உயர்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை வகுப்பு; தனித் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்: இன்று முதல் பதிவு செய்யலாம்

      பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வதற்கான அறிவுறுத்தலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

 

Aided Schools Epayroll Preaparation Regarding...

        தொடக்கக் கல்வி - உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினை பயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்! 

யாரைத் தான் நம்புவதோ...?: தகவலில் தவறு செய்யும் பெரிய நிறுவனங்கள்

        உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் தேடுதல் உலவியும், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பிபிசி.,யும் முக்கிய தலைவர்கள் பற்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளன. இருப்பினும் இந்நிறுவனங்களின் தவறு, அவற்றின் மீதான நம்பகத் தன்மையை சற்றே அசைத்து பார்த்துள்ளது.

வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி சலுகை


வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி சலுகை

     இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
 
 

ரூ.280 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள்: முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

      தமிழகம் முழுவதும் சுமார் 280 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

உயிர் காக்கும் தலைக்கவசம்

உயிர் காக்கும் தலைக்கவசம்

            – இது ஏதோ வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அல்ல. தலை உடைந்து உயிரிழந்து போனவர்களின் எண்ணிக்கை. கேட்கவே இதயம் நடுங்குகிறதல்லவா? இன்றைய காலகட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டன.

கண்ணியமான ஆடைகளை அணிவது அவசியம்: ஆசிரியர்களுக்கு உத்தரவு.

          பள்ளி வளாகத்துக்குள், வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் ஏற்ற ஆடைகளை கண்ணியமாக அணிந்துவரவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
 

போலிச் சான்றிதழ்: தில்லி சட்டத்துறை அமைச்சர் கைது.

              தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டோமர் போலி பட்டப் படிப்பு  சான்றிதழ் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆம் ஆத்மி கட்சியின் சட்டத்துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் டோமர் சட்டம் பயிலாமலேயே, சட்டப் படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது. 

மாற்றுச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில்...பிறந்த தேதியின் அடிப்படையில் உரிய வகுப்பில் சேர்த்திட வேண்டுதல் சார்பு செயல்முறை

      பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் பொழுது 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில்...பிறந்த தேதியின் அடிப்படையில் உரிய வகுப்பில் சேர்த்திட வேண்டுதல் சார்பு செயல்முறை

பள்ளி செல்லாத குழந்தைகள் 'உபாசி'யுடன் விவரம் சேகரிப்பு

         பள்ளி செல்லாத, தோட்டத் தொழிலாளர் குழந்தைகள் பற்றிய விவரத்தை, தென்னிந்திய தோட்ட அதிபர்களின் சங்க (உபாசி) உதவியுடன் சேகரிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முதல் வகுப்பு வரை மட்டுமே

         தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

பள்ளி விடுதிகளில் 'நூடுல்ஸ்'க்கு தடை

       பள்ளி விடுதிகள் மற்றும் கேன்டீன்களில் நுாடுல்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது-உயர் நீதிமன்ற மதுரை கிளை

        அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்பு சலுகை காட்ட முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர் தாக்கல் செய்த மனு:
 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இல்லை

        இலவச மாணவர் சேர்க்கைக்கான, 25 சதவீத இட விவரங்களை, மெட்ரிக் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. இந்த பள்ளிகளின் பட்டியல் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.


கலை, அறிவியல் கல்லூரிகளில் முன்தயாரிப்பு பயிற்சி வகுப்பு ரத்து?

      பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படுவதுபோல, கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த உயர் கல்விக்கான முன்தயாரிப்பு வகுப்பான "பிரிட்ஜ் கோர்ஸ்' ரத்து செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் விலக்கு அளித்து உத்தரவு: பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை

      ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ், புகைப்பட சான்றிதழ், முகவரி சான்றிதழ் உள்ளிட்டவைகளை கட்டாயமாகசமர்ப்பிக்க வேண்டும்.
 

ஏர்டெல் இணைய கட்டணம் உயர்வு

      இணைய தள வழியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இன்‌டர்நெட் டேட்டா கட்டணம் அதிகரித்துள்ளது. ஏர்டெல் இணைய தளத்தில் டேட்டா ரீச்சார்ஜ் செய்யும்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியை அந்நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.
 

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

       “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி.

அரசு அங்கீகாரம் பெறாத 72 தனியார் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

       பெங்களூருவின் வடக்கு, தெற்கு கல்வி மண்டலங்களில் உள்ள, அரசு அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, கர்நாடகா பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், 72 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு

        கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive