ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும் என
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி கழகம் வலியுறுத்தி
உள்ளது.தேனி மாவட்ட தலைவர் சின்னராஜா கூறியதாவது:
தமிழகத்தில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை, மூன்று நாட்களில்,
ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 595 பொறியியல்
கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப
வினியோகம், மே, 6ம் தேதி துவங்கியது.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட
அறிவிப்பில், 'மே மாதம் நடக்கும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஆன் -
லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், மே 8ம் தேதி (நேற்று) முதல், ஹால்
டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப
எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பெறலாம்' என,
கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு
எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை வியாழக்கிழமை
வெளியிடப்பட்ட நிலையில், எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 3 -ஆம்
தேதி கடைசியாகும்.
அச்சுப்பணி தாமதமானதால், சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி,
ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின்
அறிவுறுத்தலின்படி, வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பு
எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும்
மாற்றப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில், 196 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி
பெற்றுள்ளன. மூன்று மாணவியர், 1,172 மதிப்பெண் பெற்று, அரசு பள்ளிகள்
பிரிவில், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், முதல்
நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்
விண்ணப்பித்தனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்
வரும் 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநில கல்வியியல்
ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய
படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ.,
மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய
பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே
நாளில் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 83 அரசு
கல்லூரிகள், 165 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 350க்கும் மேற்பட்ட சுய நிதி
கல்லூரிகள் உள்ளன.
வேலைவாய்ப்பு குறைந்ததால், என்ஜினீயரிங் படிப்பைவிட கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் பயில்வதற்கான ஆலோசனை பெற
இலவசத் தொலைபேசி எண்ணை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வியாழக்கிழமை
அறிமுகப்படுத்தியது.
தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிளஸ் 2 தேர்வில்
தேர்ச்சி பெற்றார். ஜோலார்பேட்டை மங்கம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்
கிருஷ்ணன் மகள் சசிகலா (17). இவர், ஜெயமாதா நகரில் உள்ள தனியார் பள்ளியில்
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்துக்
கொண்டிருந்தார்.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்
கல்லூரியில் வரும் 11 (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட
உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கோவை மாநகராட்சி பள்ளிகள், கடந்தாண்டு பிளஸ்
2 பொதுத்தேர்வில், 91.82 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்தாண்டு,
தேர்ச்சி சதவீதம் குறைந்து, 89.34 சதவீதம் பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதம்
குறைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல்,
வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண்
நிர்ணயிக்கப்படுகிறது.
![](https://ci3.googleusercontent.com/proxy/r0I4Cqyg-cHodUT4APF3kPTBTeunbWDEOkNFS4Qm_tyDTAxFUHubfjw9P7_HeQTsSp3RIFKgj0p4cKMCoXW1=s0-d-e1-ft#http://cmcell.tn.gov.in/images/header.jpg) |
Petition Reply Details
Petition No | 2015/820797/BU |
Forwarded to | ADI DRAVIDA & TRIBAL WELFARE - DIR,ADI DRAVIDA WELFARE |
Petition Status | Accepted |
Concerned Office Reply | As per the interim order dated 16.04.2015 of this case, 70 of Total vacancy (669) can be filled by TRB and 30 may
be filled after the final judgement. Hence, now the TRB is requested
to give the ed candidates list. This fact also informed to the
petitioner vide this
Lr. No.R3/28688/2014, dated 05.05.2015. - www.Padasalai.Net |
|
|
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.
Phone: 044 - 2567 1764
Fax : 044 - 2567 6929
|
|
பிளஸ் 2 தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது, மதிப்பெண் குறைந்தது போன்ற காரணங்களால் சங்கடமாக உணர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என 6
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று ‘104’ சேவை மையத்துக்கு தொடர்பு
கொண்டு ஆலோசனை பெற்றனர்.
ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
தேர்வு
நேரங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கும் அருமருந்தாக 104 உதவி மையம்
விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு
மற்றும் குடும்ப நல துறையின் கீழ் இயங்கி வரும் இந்த உதவி மையம் பல்வேறு
வழிகளில் உதவிகரமாக இருக்கிறது. மற்ற நேரங்களில் மருத்துவ ஆலோசனைகளை
வழங்கும் இந்த மையம், தேர்வு நேரத்தில் முழுக்க முழுக்க மாணவர்களின் மனதில்
இருக்கும் வலியை போக்குவதற்கு பயன்படுகிறது.
இதுகுறித்து, தேர்வுத் துறை
இயக்குனர் தேவராஜன்
வெளியிட்ட அறிவிப்பு:
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு,
மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும்,
தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புகளில் சேரப்போகும்
மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள்
அவற்றை எங்கே
பெறுவது என்பன
குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக்
கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள்.
பேஸ்புக்,
டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு)
மறக்காமல் இருப்பது மிக கடினமான செயல்களில் ஒன்று. இந்த கஷ்டத்தை
போக்கும்விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கடவுச்சொல்லுக்குப்
பதிலாக கேள்வி-பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.
10-ஆம்
வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென
போதிய மையங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் அமைக்க வேண்டும்
என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்' அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில்,
'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது
தெரியவந்து உள்ளது.
பிளஸ்
2 பொதுத் தேர்வு தேர்ச்சியில் வட மாவட்டங்களில் பெரிய முன்னேற்றம்
ஏற்படவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, அரியலுார்
உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம், மற்ற மாவட்டங்களை விட
குறைந்தே உள்ளது. மாநில 'ரேங்க்' பெறுவதிலும் தேர்ச்சி சதவீதத்திலும் மற்ற
மாவட்டங்களை இந்த ஆண்டாவது பின்னுக்குத் தள்ளும் என்ற எதிர்பார்ப்பு
வழக்கம் போல் பொய்த்துப் போனது. மற்ற மாவட்டங்கள் 90 சதவீதத்தை எட்டிய
நிலையில், இம்மாவட்டங்கள் இன்னும் 80 சதவீதத்தை தக்க வைக்கவே போராடும் நிலை
உள்ளது.
இந்த
ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது.
மாநில, மாவட்ட இடங்களைப் பிடிக்காவிட்டாலும் 90 சதவீத தேர்ச்சி கூட பெற
முடியாமல் அரசு பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கத்தை சமாளிக்க
முடியாமல் திணறும் சூழல் உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் திரைப்பட பின்னணி பாடகி சுருதி 1,172
மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தந்தையை இழந்தாலும் துவண்டுவிடாமல் படித்து, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.
சிறையில்
இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய 65 கைதிகளில் 64 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம்
அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 31020 மாணவ –மாணவிகள்
பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள். இதில் 29 ஆயிரத்து 702 மாணவ – மாணவிகள்
தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.75 ஆகும்.
விருதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கம்ப்யூட்டர் சயின்ஸ்
பிரிவு மாணவி ஒருவரது மதிப்பெண்ணில் இயற்பியல் செய்முறைத்தேர்வில் 50
மதிப்பெண், எழுத்துத்தேர்வில் 'ஜீரோ'மதிப்பெண் வாங்கியதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தரப்பில் புகார்
செய்யப்பட்டுள்ளது.