1.இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான்அய்யா..!)
2.உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
3.இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.
தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச்
சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
01.01.2015
நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி
ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த
ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்
தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர்
இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு
விண்ணப்பிப்போர், அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில்
காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.
"தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல்
மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில்
300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்
கீழ் செயல்படுகின்றன.
இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு
முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை
பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில் நிலையங்களில் மாற்றுத்
திறனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது
என்பதுதான் பல அம்மாக்களின் கவலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது
வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி
ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால்
சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது.
ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித
சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர்
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13
ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு
செய்துள்ளனர்.
1990 காலகட்டங்களில் உலக வங்கியின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக்
கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார்மயம்
அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதன்விளைவு, தனியார்
முதலாளிகளும், நிறுவனங்களும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி,
கல்லூரிகளைத் துவங்கினர்.
நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு
முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில்
கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு
மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட
அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து
விட்டது.
தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு
அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம்
செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு
ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு.
அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும்
தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும்
என்றால், அவர் ஆசிரியர்.
அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர்
பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
01.01.2015
நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்
(தமிழ்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்
01.01.2015
நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்
(ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்
கடுமையான
நில நடுக்கத்தால் நிலைகுலைந்து கிடக்கும் நேபாளத்தில் 37 தமிழர்கள் உள்பட
இன்னும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித்தவித்து வரும் வேளையில்
நேபாளத்தில் காணாமல் போன மக்களை கண்டுபிடிக்க சிறப்பு தேடுதளம் ஒன்றினை
தேடுஇயந்திர ஜாம்பவானான 'கூகுள்' அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி
அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி
நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள்,
இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன.
ஐக்கிய
அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஓட்டலில் ஒரு
ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பணமான திர்ஹம்
நோட்டுகள் மற்றும் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்த
இயந்திரத்தில் செலுத்தினால் 10 கிராம் முதல் பல கிலோ எடை கொண்ட தங்கக்
கட்டிகள் வரை 320 வகை அளவுகளில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.
சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்
களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி
ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு
ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை
பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு
சரிபார்க்கப்படும்.
பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன்
பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர்
ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு, பள்ளிகளில் பலவிதமான
ஒழுக்கக்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்-அப் வழியாக கணித வினாத்தாள்
அனுப்பிய விவகாரம், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளிகளில் AA, SSA & RMSA(BC, KH) போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் AA தலைப்பானது மாநில அரசு நிதியில் வழங்கப்படும் நிரந்தர பணியிடங்களாகும். அவற்றிற்கு தனியே சம்பளம் பெறும் ஆணைகள் வழங்கப்படுவதில்லை. எனவே அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது.
மேல்நிலைப்
பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு
மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம்
வலியுறுத்தினார்.
ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி,
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.
Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center
Ø Ariyalur -
Male:
Government Higher Secondary School (Ariyalur)
Periyar Higher Secondary School (Jayamkondan).
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக
அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி
செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு
தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.
சென்னையில், 6 முதல் 18 வயது வரை உள்ள, மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.