வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்கப்படுகிறது .
By.
P.Rajalingam Puliangudi
பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பதவி
உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
ஆசிரியர் மாறுதல் தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் எதிர்பபார்க்கின்றனர். சென்ற வருடம் போன்று தாமதமாக மாறுதல் கலந்தாய்வினை நடத்தி ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளானது போன்று இம்முறை நிகழாது என்று எதிர்பார்க்கின்றோம்.முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். அரசு செவிசாய்க்குமா?
By.
Mr.Sivakumar
SG Teacher, Mangalore Union