Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவி பேராசிரியர் பணிக்கு ஜூjன் 28ல் நெட் தகுதி தேர்வு - உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் நெட் தகுதி தேர்வு


அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறை சிபிஎஸ்இ ்) நடத்தியது.

பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிப்பு

பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் புத்தக நிலையங்கள் மற்றும் பள்ளிகளில்தான், பெற்றோர்கள் அதிக விலைக்கு புத்தகம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிச் சுவர் இடிந்து 2 மாணவிகள் பலி: தமிழக அரசு நிதியுதவி...

சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மரணமடைந்த இரு மாணவிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
12 கோரிக்கைகள் அரசு ஏற்று கொண்டதால் சத்துணவு ஊழியர்கள்  போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சத்துணவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதால் பள்ளி மாணவர்களுக்குத் தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2010 மே சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்கள் டி.இ.டி தேவையில்லை வழக்கு நாளை இறுதி விசாரணை

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணைக்கு வருகிறது. கோர்ட் எண் 2 இல் வழக்கு எண் 45 ஆவதாக இடம் பெற்றது
Thanks To
Mr.Abi murugadass

ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்( D.T.Ed) : மே 18-இல் தொடக்கம்


தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18-ஆம் தேதி தொடங்குகின்றன.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 19-ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு மே 18-ஆம் தேதியும்
தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு கால அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

அரசு உதவி பெறும் 50,000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை!

ஒவ்வொரு மாதமும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும்.பிரதி மாதம், 5ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் சேர்க்கப்படும். 

சத்துணவு சமையல் வேலை பார்க்க சொல்வதா: ஆசிரியர்கள் கொந்தளிப்பு?

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற போராட்ட அறிவிப்பால், சத்துணவு சமைத்துப் போடும் பணி செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். 

பாடசாலை வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


புத்தம்புது பொலிவே! புத்தாண்டுப்பூவே!
சித்திரைக் கனவே! வரதேவதையே!
வருடம் தவறாமல் புதுவாசம்கொண்டு வாராயோ!
வல்லமை பலதந்து வலிமை தரவந்தாயோ!.

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகள் 21.04.2015 அன்று இறுதி விசாரணையில் இடம்பெற்றுள்ளது

SUPREME COURT OF INDIA

Case Status Status : PENDING

Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

TNTET:10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் முன் நீதிமன்றம் தலையிட வலியுறுத்தல்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
லாவண்யா உள்ளிட்ட சிலர் , ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், தகுதியானவர்கள், தகுதியிழப்பு செய்யப்படுகின்றனர். எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான வழக்கு: 21-ல் விசாரணை - Dinamani

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பென்ஷன் ,ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லை .திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 
நடக்கும் என மற்றொரு சங்கமான  தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு .திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.

சத்துணவு ஊழியர்கள் - அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு -தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன்

சத்துணவு ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இன்று சென்னையில் சத்துணவு ஊழியர்களுடன் அரசு
பேச்சுவார்த்தை நடத்தியது.

TET CURT NEWS : TET வழக்குகள் ஏப்ரல்21 இறுதி விசாரணை,அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அரசு செவிசாய்க்குமா?


  ஆசிரியர் மாறுதல்  தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் எதிர்பபார்க்கின்றனர். சென்ற வருடம் போன்று தாமதமாக மாறுதல் கலந்தாய்வினை நடத்தி ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளானது போன்று இம்முறை நிகழாது என்று எதிர்பார்க்கின்றோம்.முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். அரசு செவிசாய்க்குமா?

By.
Mr.Sivakumar
SG Teacher, Mangalore Union

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதம்மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார்.
சென்னை குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "குரு ஹர்க்ரிஷண்' என்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

தொலைதூர கல்வி தேர்வுபல்கலை அறிவிப்பு மதுரை காமராஜ் பல்கலை

தொலைநிலை கல்வி இயக்கக மாணவர்களுக்கான நான்செமஸ்டர் தேர்வுகளுக்கு ஏப். 21க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்த வேண்டும். இளநிலை மற்றும் பி.எட். படிப்பிற்கு மே 16லும், முதுநிலை படிப்புக்கு மே 23லும் தேர்வு துவங்குகிறது.எம்.பி.ஏ. எம்.சி.ஏ. டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புக்கு ஏப். 27 க்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மே 27 ல் தேர்வு துவங்குகிறது.

மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்


நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை


தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி. 

கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை 
போதிய ஒத்துழைப்பு தராததால், பணிகள் தொய்வடைந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன், எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் கூட்டுறவு ஊழியர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஓராண்டில் பட்டயப் படிப்பை முடிக்க புது நிபந்தனை

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டு றவு பணியாளர்களில் 3 ஆயிரம் பேர்பணியில் சேருவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. அவர்கள் ஓராண்டுக்குள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியை முடிக்காவிட்டால், தேர்ச்சி பெற்றது ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் சம்பள உயர்வு கேட்டு 73,000 பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டம்

இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார். 
இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம்சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15 உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார், ‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின் வாங்குகிறது’ என்றார்.

இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.

TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,
23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது .இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

Thanks To,
Mr.Abi Mudugadoss

பெண்களின் ஏற்றமும் ஆண்களின் கவலையும் - Article




ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை  ஆணும் பெண்ணும் சமம்ஆண்களும், பெண்களும் அடிமைகளாய் இருந்து காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளோம். சென்ற நூற்றாண்டு வரை அடிமைகளாய் இருந்த நாம் அடிமைத்தனம் எனும் அகங்காரத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திரம் எனும் சுயகௌரவத்தைப் பெற்றுள்ளோம்.  

SG Pay Scail Court Case Detail - By: Mr. Kipson, TATA

           டாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015இன்று 9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு 23 வது வழக்காக 12;05 மணிக்கு எடுக்க பட்டது நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாடினார் கள் .
 

CENTRAL GOVT D.A. ORDER RELEASED BY FINANCE MINISTRY TODAY.

குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

          சென்னை மாவட்ட இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள்  விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
 

மேல்நிலை கல்வி தேர்வு செய்வதில் உஷார்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை

            உயர்கல்வியில், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு, மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் இல்லை எனவும், இதன் காரணமாகவே பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive