Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என மற்றொரு சங்கமான தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

பென்ஷன் ,ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லை .திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 
நடக்கும் என மற்றொரு சங்கமான  தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு .திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்.

சத்துணவு ஊழியர்கள் - அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு -தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன்

சத்துணவு ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இன்று சென்னையில் சத்துணவு ஊழியர்களுடன் அரசு
பேச்சுவார்த்தை நடத்தியது.

TET CURT NEWS : TET வழக்குகள் ஏப்ரல்21 இறுதி விசாரணை,அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் தகுதி தேர்வு -2013 பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கோர்ட் எண் 7 இல் வழக்கு எண் 9 ஆவதாக இடம் பெற்றது.இன்று இரு தரப்பு விவாதம் நடைபெற்றது .ஏப்ரல்21 இறுதி விசாரணை. அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அரசு செவிசாய்க்குமா?


  ஆசிரியர் மாறுதல்  தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் எதிர்பபார்க்கின்றனர். சென்ற வருடம் போன்று தாமதமாக மாறுதல் கலந்தாய்வினை நடத்தி ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளானது போன்று இம்முறை நிகழாது என்று எதிர்பார்க்கின்றோம்.முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால் ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். அரசு செவிசாய்க்குமா?

By.
Mr.Sivakumar
SG Teacher, Mangalore Union

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் கட்சி தலைவர்கள் ஆதரவு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதம்மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்திட வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆசிரியர்கள் ஏராளமானோர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது

தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார்.
சென்னை குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "குரு ஹர்க்ரிஷண்' என்ற புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

தொலைதூர கல்வி தேர்வுபல்கலை அறிவிப்பு மதுரை காமராஜ் பல்கலை

தொலைநிலை கல்வி இயக்கக மாணவர்களுக்கான நான்செமஸ்டர் தேர்வுகளுக்கு ஏப். 21க்குள் அபராதமின்றி கட்டணம் செலுத்த வேண்டும். இளநிலை மற்றும் பி.எட். படிப்பிற்கு மே 16லும், முதுநிலை படிப்புக்கு மே 23லும் தேர்வு துவங்குகிறது.எம்.பி.ஏ. எம்.சி.ஏ. டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் அடிப்படை நிலை பட்டப்படிப்புக்கு ஏப். 27 க்குள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மே 27 ல் தேர்வு துவங்குகிறது.

மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ்: அக்கரைப்பேட்டையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்


நாகப்பட்டினம் மாவட்டம் அக்க ரைப்பேட்டையில் மாநிலத்தில் முதன்முறையாக அரசுப் பள்ளி யில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை நேற்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை


தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள் ளது என்றார் கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வே.வசந்திதேவி. 

கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை 
போதிய ஒத்துழைப்பு தராததால், பணிகள் தொய்வடைந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன், எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் கூட்டுறவு ஊழியர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஓராண்டில் பட்டயப் படிப்பை முடிக்க புது நிபந்தனை

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டு றவு பணியாளர்களில் 3 ஆயிரம் பேர்பணியில் சேருவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. அவர்கள் ஓராண்டுக்குள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியை முடிக்காவிட்டால், தேர்ச்சி பெற்றது ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் சம்பள உயர்வு கேட்டு 73,000 பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டம்

இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார். 
இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம்சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15 உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார், ‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின் வாங்குகிறது’ என்றார்.

இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.

TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,
23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது .இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

Thanks To,
Mr.Abi Mudugadoss

பெண்களின் ஏற்றமும் ஆண்களின் கவலையும் - Article




ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை  ஆணும் பெண்ணும் சமம்ஆண்களும், பெண்களும் அடிமைகளாய் இருந்து காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளோம். சென்ற நூற்றாண்டு வரை அடிமைகளாய் இருந்த நாம் அடிமைத்தனம் எனும் அகங்காரத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திரம் எனும் சுயகௌரவத்தைப் பெற்றுள்ளோம்.  

SG Pay Scail Court Case Detail - By: Mr. Kipson, TATA

           டாட்டா வின் முன்றாம் ஊதிய வழக்கு W.P.(MD) No; 5301/2015இன்று 9.4.2015 மதுரை உயர் நீதிமன்றம் கிளை யில் நீதிபதி மாண்புமிகு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு 23 வது வழக்காக 12;05 மணிக்கு எடுக்க பட்டது நமது டாட்டா சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.அஜ்மல் கான் அவர்கள் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆஜர் ஆகி வாதாடினார் கள் .
 

CENTRAL GOVT D.A. ORDER RELEASED BY FINANCE MINISTRY TODAY.

குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

          சென்னை மாவட்ட இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழு தலைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள்  விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
 

மேல்நிலை கல்வி தேர்வு செய்வதில் உஷார்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை

            உயர்கல்வியில், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வு, மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் இல்லை எனவும், இதன் காரணமாகவே பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக அறிவியலில் கேள்விகள் எளிமை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

          'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் வினாக்கள் மிக எளிதாக இருந்தன,' என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு

         கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

உங்கள் PF கார்டு நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

        பணியாளர் வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில் இருக்கும்போதோ நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது. 

கல்வித்துறையில் விஷக்கொடுக்கு!

           அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, நவீன மயத்திற்கான ஒரு திறவுகோல் ஆகும். இந்தத் திறவு கோலைத் திறந்து திறமையாகப் பயன்படுத்த அறிவாளிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் அவசியம். அறிவியல் தொழில்நுட்பம் என்பது ஒட்டு மொத்த கல்வித் துறையின் ஒரு அங்கம்.
 

TET தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் 
GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு அளித்துள்ளததாக தகவல்.

அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.
மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி

80 வயதை தாண்டினாலும் ‘மறு மணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டு உள்ள புதிய உத்தரவினால் மூத்த குடிமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்????????????

GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றி அறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை

தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.

விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா?

பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த, 'பங்க்' உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

முடிந்து போன தேர்வுக்கு பாடப்புத்தகம் விற்பனை

சென்னை, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பாடநூல் விற்பனை மையத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்களுக்குப் பதில், தேர்வுகள் முடிந்த, மூன்றாம் பருவ புத்தகங்களை விற்றனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive