Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை
கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் கூட்டுறவு ஊழியர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஓராண்டில் பட்டயப் படிப்பை முடிக்க புது நிபந்தனை
பீகாரில் சம்பள உயர்வு கேட்டு 73,000 பள்ளிகளை பூட்டி ஆசிரியர்கள் போராட்டம்
இந்திய அளவில் படித்தவர்களின் சராசரி விகிதம் 74. ஆனால் பீகாரில் 63 சதவீதம் பேரே படித்துள்ளனர்.அடிப்படைக்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நிதீஷ்குமார் ஏற்கனவே முதல்–மந்திரியாக இருந்த போது 3.5 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தார்.
இவர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டது.அந்த மாநிலத்தில் உள்ள 80 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம்சராசரியாக ரூ.40 ஆயிரம். ஆனால், தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளமாக தலா ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.தற்போது பீகார் மாநில தொடக்கப் பள்ளிகளில் 63 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. எனவே, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, கூடுதல் ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.இதுகுறித்து மாநில கல்வி மந்திரி பி.கே.சகி கூறும்போது, ‘‘ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து அரசுடன் பேசப்போகும் 15 உறுப்பினர்களின் பட்டியலை முதலில் அவர்கள் தரட்டும். அதன் பிறகு பேசி முடிவு செய்யலாம்’’ என்றார். ஆனால் ஆசிரியர் சங்க தலைவர் புரன்குமார், ‘ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய அரசு இப்போது பின் வாங்குகிறது’ என்றார்.
இந்த நிலையில் நியமன ஆசிரியர்கள் நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். நேற்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது.இதையடுத்து பீகார் மாநிலம் முழுவதும் 73 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்துக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது.
TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,
23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது .இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
Thanks To,
Mr.Abi Mudugadoss
பெண்களின் ஏற்றமும் ஆண்களின் கவலையும் - Article
SG Pay Scail Court Case Detail - By: Mr. Kipson, TATA
குழந்தைகள் நலக்குழு தலைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
மேல்நிலை கல்வி தேர்வு செய்வதில் உஷார்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரை
சமூக அறிவியலில் கேள்விகள் எளிமை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு
உங்கள் PF கார்டு நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்!
TET தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில்
GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு அளித்துள்ளததாக தகவல்.
அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.
மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.
இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு
80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி
விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்????????????
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை
விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா?
முடிந்து போன தேர்வுக்கு பாடப்புத்தகம் விற்பனை
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'
இபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
இபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது:
படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது
செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் அதிரடி முடிவு
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற13.04.2015 அன்று கோர்ட் எண்.7 வழக்கு எண் 9 ஆவதாக விசாரணைக்கு வருகிறது..
Thanks To பெ.சங்கர்குமார் சின்னத்திருப்பதி. ஓமலூர். சேலம்.