தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி
கூறினார். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், ஒசூரில்
"கட்செவி அஞ்சல்' ("வாட்ஸ் அப்') மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான
விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத்
தீர்மானம் கொண்டு வந்தனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ்-2 தேர்வில் கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம்!
'பிளஸ்-2 தேர்வு இப்போதுதானே முடிஞ்சது. தேர்வு
முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லையே...அதற்குள்ளாக கடலூர், வேலூர்
மாவட்டங்கள் முதலிடம் என்று சொல்லுறாங்களே!' ன்னு நீங்கள் தலையை பிய்த்து
கொள்வது புரிகிறது. கொஞ்சம் பொறுங்க பாஸ். பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்து
பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கையில்தான் சார் இந்த இரண்டு மாவட்டங்களும்
முதலிடத்தை பிடித்திருக்கின்றன.
இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.
01.04.2015 தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர்
ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், RMSA
இயக்குநர் முனைவர் க. அறிவொளி, தேர்வுத்துறை இயக்குநர் திரு. கு. தேவராஜன்,
SCRT இயக்குநர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வாணைய
உறுப்பினர் செயலாளர் திருமதி. தன். வசுந்தராதேவி ஆகியோரை ஐபெட்டோ அகில
இந்திய செயலாளர் வா. அண்ணாமலை அவர்கள் சந்தித்தார்.
அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
காஞ்சிபுரம்
அருகே முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர்கள்
சார்பில், மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் கீழ்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச்
சேர்ந்த 390 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: பல்கலை ஊழியர்கள் 8 பேர் 'சஸ்பெண்ட்'
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், விடைத்தாள்
மாயமான விவகாரம் தொடர்பாக, ஊழியர்கள், எட்டு பேர், 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., பட்டியல் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
உதவிப் பேராசிரியர் பணிக்கு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை,
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார்
தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில்
ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘’ஆசிரியர் கல்வியியல்,
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர்
கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு
விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவிப்பு வெளியிட்டது.
உயிரியல் தேர்வு மிகக் கடினம்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்
பிளஸ் 2 தேர்வில் கடைசிப் பாடமான உயிரியல்
தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில்
சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னம்மை தாக்கம் அதிகரிப்பு: வைரஸ் உருமாறி தீவிரம் பெற்றதா?
தமிழகத்தில், கோடையின் தாக்கம் துவங்கும்
முன், 'சிக்கன் - பாக்ஸ்' எனப்படும், சின்னம்மை வேகமாக பரவி வருகிறது.
கொப்பளங்கள் ஆறினாலும், தழும்புகள் மாறாததால், வைரஸ் உருமாறி தீவிரம்
பெற்றுள்ளதா என, சுகாதார அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுக்கு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீடு: அரசுக்கு எதிராக வழக்கு
முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகளுக்கு
மருத்துவப் படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக
அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு விடுமுறையில் வகுப்பு; அரசு பள்ளிகளிலும் தொடங்கியது
அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது.
பிளஸ் 2 தேர்வு: 394 பேருக்கு 3 ஆண்டு தேர்வெழுத தடை?
பிளஸ் 2 தேர்வில், 394 பேர் முறைகேட்டில்
சிக்கி, மூன்றாண்டுகள் வரை, தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட உள்ளது. கணிதத்
தேர்வில் அதிகபட்சம், 52 பேர் சிக்கி, தேர்வெழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
பிளஸ் 2 வேதியியல் பிழையான இரு வினாக்களுக்கு மதிப்பெண்
பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் பிழையுடன்
கேட்கப்பட்ட இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க
அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
குளறுபடி பாடத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி கல்வித்துறைக்கு 'நோட்டீஸ்': கலை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை
'ஓவியம் தொடர்பான குளறுபடியான
பாடத்திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், வழக்கு தொடரப்படும்' என, கல்வித்துறை
அதிகாரிகளுக்கு, கலை ஆசிரியர் சங்கம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு இலவச மரக்கன்று: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்
'சுற்றுச்சூழல் பாடத்தை, பாடத்திட்டதில்
சேர்ப்பதுடன், மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்று அளித்து, அவற்றை கல்வி
நிறுவன வளாகத்தில் நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்' என, பல்கலை
மானியக் குழு - யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
விலங்கியல் கேள்விகள் கடினம்: உயிரியலில் 200 கேள்விக்குறி
பிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் அனைத்து
பிரிவுகளிலும் கடினமாக கேள்விகள் கேட்கப்பட்டதால் உயிரியல் தேர்வில் 200
மதிப்பெண் எடுப்பது சிரமம்' என மாணவர்கள் தெரிவித்தனர்.
பல வினாக்கள்; ஒரே பதில்: மாணவர்களுக்கு வசதி
பிளஸ் 2 வரலாறு தேர்வில் அடுத்தடுத்து இடம்
பெற்ற சில வினாக்களுக்கு ஒரே மாதிரி பதில் அளிக்கும் வகையில் இருந்ததால்
மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆய்வு செய்யப்படாத 2,000 பள்ளி வாகனங்கள்: உஷார் அடையுமா போக்குவரத்து துறை?
கடந்த ஆண்டு, பள்ளி வாகன ஆய்வில், 2,000
வாகனங்களின் ஆய்வை முடிக்க முடியாமல் போனது. இந்த ஆண்டு, கோடை
விடுமுறையில், பள்ளி வாகனங்களின் ஆய்வை முடிக்க, போக்குவரத்து துறை
திட்டமிட வேண்டும்.
சோதனையில் முடிந்த பிளஸ் 2 உயிரியல்: 'சென்டம்' குறைய வாய்ப்பு
'பிளஸ் 2 பொதுத் தேர்வின் கடைசி தேர்வான
உயிரியலில் கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் 'சென்டம்' எடுக்கும்
மாணவர்கள் எண்ணிக்கை குறையும்' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.