உத்தரப்பிரதேச
மாநில அரசு மாணவர்களுக்கு இலவசமாக
அளித்த லேப்-டாப்கள் இணையத்தில்
அமோகமாக விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில்
2012 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவால் துவங்கப்பட்ட இந்த 'இலவச மடிக்கணினி'
திட்டத்தின் மூலம் மொரதாபாத் மாவட்டத்தில்
ரூ. 19,000 மதிப்புள்ள 24, 143 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளி ஆய்வாளர்
சர்வன் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.