மாணவர்கள், மதிப்பெண் சார்ந்த படிப்பு மட்டுமின்றி, சிந்தனை திறனையும்
வளர்த்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்தும் அளித்து, நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்., இரண்டாவது வாரம், பள்ளிகளில், 'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியரிடையே நேச மனப்பான்மையை ஏற்படுத்த, சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் இணைந்து, பரிசையும் கருத்துக்களையும் பரிமாற, ஏழை மக்களுக்கு உதவும் என, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 6ம் தேதி நடக்க இருக்கும் பிளஸ் 2 தேர்வு
10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடத்துவது வழக்கம்.
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு
விடுமுறையாக 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக
அரசின் தலைமை காஜி ‘‘துல்ஹஜ் மாத பிறை கடந்த 25–ந்தேதி தெரியவில்லை. இதனால்
பக்ரீத் பண்டிகை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி கொண்டாடப்படும்’’ என்று
அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை
தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை
கைவிடக்கோரி 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணி, பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தமிழ்நாடு மலைவாழ்
மக்கள் சங்கம், மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை,
பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு, பெரும்பாலான மாணவர்கள்
வராததால், ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம்
முழுவதும், பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வானது,
பொதுத்தேர்வு கேள்வித்தாள் பாணியில், நடத்தப்பட்டது. தேர்வுகள், கடந்த
முடிவடைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் துவங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால்,
ஆயிரக்கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் முதல் சிறந்த சர்வதேச பள்ளியாக,
மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி பெற்றுள்ளது. எஜுகேஷன்
வேர்ல்டு என்ற பத்திரிகை, ஒரு சர்வே நடத்தி, அதன்மூலம் இந்தியாவில், முதல்
10 இடங்களில் வரும் சிறந்த சர்வதேச பள்ளிகள் எவை என்ற விபரத்தை
வெளியிட்டுள்ளது.
பெண்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே
லாயக்கானவர்கள் என்ற கருத்து உடைபட்டு வெகுநாட்கள் ஆன நிலையில், தங்களுக்கு
கிடைக்கும் பணி வாய்ப்புகளில், ஆண்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்று
அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு 2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர்
தகுதித்தேர்வு நடைபெற்று, 5% மதிப்பெண் தளர்வு உட்பட 72,701 இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிப்பெற்றனர்...
தொடக்கக் கல்வி -
ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்
03.10.2014 விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி
இயக்குனர் உத்தரவு
மத்திய அரசு இடைநிலை
ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரிய TATA தொடர்ந்த வழக்கில் 8
வாரத்தில் மனுதாரரின் மனு மீது தமிழக அரசின் நிதித்துறை செயலர் நடவடிக்கை
எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ல்
கொண்டாடப்படுவதையொட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக அரசு
அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக
அனுசரிக்கப்படும்.
உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., உதவியுடன் எஸ்.சி., எஸ்.டி.,
ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 'நெட்' தகுதி தேர்வு இலவச
பயிற்சி அக்.,4 முதல் டிச.,21 வரை ஒவ்வொரு சனி, ஞாயிறில்
நடக்கிறது.டிச.,28ல் தேர்வை எழுத தயாராகும் மாணவர்கள் இதில் பங்கேற்க லாம்.
புதுச்சேரியில் "சென்டாக்' மருத்துவ மாணவர் சேர்க்கையில்
போலிச் சான்றிதழ்கள் அளித்தது தொடர்பாக வில்லியனூரைச் சேர்ந்த 3 வருவாய்த்
துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.