Latest Updates
Quarterly Exam Questions 2024
செப்டம்பர் 30ம் தேதி எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். காலி இடங்களுக்கான கலந்தாய்வு
தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு இரண்டு கட்ட மாக
கலந்தாய்வு முடிந்து, இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில்
ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம் - மீண்டும் தொடங்கப்படுமா?
எந்தவித அறிவிப்புமின்றி, மாணவர்களின் அறிவை
வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம், பள்ளிகளில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கலைச் சொற்கள், கோட்பாடுகள்,
அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின்
பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இது, கடந்த இரு ஆண்டுகளாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்!
தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்
பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல
பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும்
பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த
தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. துவக்கத்தில், ஆறு பிரிவுகளில் 66
உட்பிரிவுகளை கொண்டிருந்த தொழிற்கல்வி, தற்போது 12 உட்பிரிவுகளாக
குறைந்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!
மத்திய
அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ்,
பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை
சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய
மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில்
"ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
How to Read Tamil Font Documents in Android Phone & Tablets? - Padasalai's Special Tutorial Soon...
Android Smart Phone மற்றும் Tablet கணிணி சாதனங்களில் வானவில் அவ்வையார், சன் டாமி, போன்ற தமிழ் எழுத்துரு (Tamil Fonts) கொண்ட Word Document & Excel Worksheet-களை படிப்பது எப்படி?
வேலை வேண்டுமா?- ஓ.என்.ஜி.சியில் காலியிடங்கள்!!
ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ட்ரெய்னி இன்ஜினீயர் பணிக்கான பொறியியல் பட்டதாரிகள்
கேட் (GATE 2015) தேர்வு வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிப்பதற்கான காலம் அக்டோபர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை
மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம்
விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.
இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு
புதிய முதல்வராக கண்ணீர் மல்க பதவியேற்றார் ஓ. பன்னீர் செல்வம்; 30 அமைச்சர்களும் பதவியேற்பு!
ஆளுநர்
மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி
பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்
செய்து வைத்தார். அப்போது
ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர்
மல்க நா தழுதழுக்க, கண்கள்
கலங்க உறுதி மொழி ஏற்றுக்கொண் டார். அவருக்கு
கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்..
தேர்வுக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்..
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.
DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-ONLINE APPLY
S No. | Advt. No./ Date of Notification | Notification | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 |
01.09.2014
|
Deptl.Exam Dec'2014
| 01.09.2014 | 30.09.2014 |
23.12.2014
to
31.12.2014 | Apply Onlin |
காற்றில் பறந்த மனுக்கள்: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு
தமிழகத்தில்
ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்பு
விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு
செய்யப்பட்டார். இதற்கான கடிதம் ஆளுநர் ரோசையாவிடம் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை
பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள
ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
TNTET Certificate Download Date Closed.
TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment
Board. The facility of downloading the TNTET certificates was made
available from 03-Sep-2014 to 25-Sep-2014. Downloading option is closed
at 00.00 hrs on 26-Sep-2014
PG முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி திட்டமிட்டபடி நடக்கும்!
PG முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி திட்டமிட்டபடி நடக்கும்!
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள்
நடக்கின்றன.
TET பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி - 30.9.14 & 1.10.2014
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டு 30.08.2014 முதல் 05.09.2014 முடிய நடைபெற்ற
இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலை தொடக்கம்!!
இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில்
தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளை ஞர்களை உருவாக்கும் நோக்கில்
குஜராத் மாநில அரசும் மனித வள நிறுவனமான டீம் லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த
பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளது.
9ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்கான புதிய திட்டம்!!!
அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து
கல்வித்துறை ஆய்வு நடத்தி உள்ளது. அடுத்த வாரம் வர உள்ள இம்முடிவின்
அடிப்படையில், புதிய திட்டத்தைச் செயல்படுத்த கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.
TET & PGTRB: Padasalai Place Volunteers
பாடசாலை வாசகர்களே,
அனைவருக்கும் வணக்கம். புதிய PG, BT, SG ஆசிரியர்கள் அனைவரும் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பலரும் நமது பாடசாலை வலைதள தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை பெற்றனர். கலந்தாய்வின் போது எளிய போக்குவரத்து வசதி கொண்ட பள்ளிகளை தேர்ந்தெடுக்க உதவுவது முதல் தங்கும் இடவசதி குறித்த ஏற்பாடுகளை செய்து தருவது வரை உடனிருந்து உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
TET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!!!
'புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி
நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக
தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து
இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.
Cell Phone: What is the difference between 3G & 4G? - அலைபேசி கட்டுரை 2
G-க்கள் என்றால் என்ன?
தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின்
சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும்.
சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு.
சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு |அறிவியல் தொழில் ஆராய்ச்சி
கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கடந்த ஜூன் 22-ம் தேதி நடத்திய ‘நெட்’ தகுதித்
தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜேஆர்எப்) முடிவு
வெளியிடப்பட்டது.
Cell Phone Technology Doubts | அலைபேசி சந்தேகங்கள்! - பாடசாலையின் புதிய பகுதி.
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக Cell Phone, Tablet தொழில்நுட்பங்கள் சார்ந்த கட்டுரை தொடர்ந்து வெளியிட உள்ளோம்.
நம் பாடசாலை வாசகர்களுக்காக இக்கட்டுரையை தொழில்நுட்ப வல்லுனர் திரு.பா. தமிழ் அவர்கள் பிரத்யோகமாக எழுத உள்ளார். இக்கட்டுரையில் அடிப்படை தொழில்நுட்பம் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை எளிய தமிழில் விளக்க உள்ளார். தொடர்ந்து அலைபேசி மற்றும் டேப்ளட் கணிணி சார்ந்த வாசகர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்க உள்ளார். எனவே பாடசாலையின் வாசகர்கள் இப்புதிய பகுதி தொடர்பான தங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம். அவற்றிற்கும் தொழில்நுட்ப வல்லுனர் தனது கட்டுரையில் பதில்களை பகிர்வார்.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும்?
பிறை சரியாக தெரியாததால் அக்டோபர்
6 ஆம் தேதி கொண்டாடப்படும் என
தலைமை காஜி அறிவித்துள்ளதாக தெரிகிறது.ஆகவே அக்டோபர் 6 ஆம் தேதி தமிழக
அரசு விடுமுறை அறிவிக்கலாம் என எதிபார்க்கப் படுகிறது.
PG TRB Exam விரைவில்...
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை
பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900
முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட
உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி
உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில்,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன்
தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.