ஈஎஸ்எல்சி பொதுத் தேர்வு செப்டம்பர் 2014 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழக அரசு
தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய
வழக்கு 33399/13 .தீர்ப்பு -நகல்-இது வரை நீதிபதியிடம் கையொப்பம் ஆக வில்லை
. தீர்ப்பு ஆணை நீதிபதி . திரு .ராமநாதன் அவர்களிடம் கையொப்பம் பெற அவரது
சேம்பர்க்கு செவ்வாய் கிழமை ( 16-09-2014 ) அனுப்பப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்து
இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை
கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு
அளித்துள்ளனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டதாரி ஆசிரியர் பணி
இடத்தில் வெயிட்டேஜ் முறை நடைமுறைப்படுத்தபட்டது குறித்து தமிழகம்
முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு
பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின்
விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்கு எட்டவில்லை.
ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க கோரி
நாளை விசாரணை பட்டியலில் வரிசை எண்.20க்குள் வழக்கை கொண்டு வர நீதியரசரை
கோரியுள்ளது.
62 - 52 = 11
562 - 452 = 11 11
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.
பிஎட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பட்டப்படிப்பை
தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு பிஎட் ஒரு வருட பட்டப்படிப்பு முக்கியமானதாக
கருதப்படுகிறது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு (2014-15) கல்வி
ஆண்டிற்கான பிஎட் படிப்புக்கு பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
முடிந்து வகுப்புகள் தொடங்கி உள்ளன.
அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி
வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன.
இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள்,
மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே
போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள்
வழங்கப்படுகின்றன.
பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பில் பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு 'ஆராய்ச்சி விருது' வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு
ஒருமுறை, தேசிய அளவில் நூறு பேர் விருதுக்கு தேர்வு
செய்யப்படுகின்றனர்.தேர்வாகும் ஆசிரியர்கள் மாநில அரசிடம் இருந்து
விடுவிக்கப்பட்டு இரு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். அவர்கள் தங்கள்
கல்லூரி அல்லது பல்கலை என எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.
இதற்காக அவர்களுக்கு கலைப்பிரிவு ஆசிரியர் எனில் ரூ. 2 லட்சம், அறிவியல்
ஆசிரியர் எனில் ரூ.3 லட்சம் மற்றும் இரு ஆண்டுகளுக்கான முழுச்சம்பளம்,
சம்பள உயர்வு வழங்கப்படும்.
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லியில் நடந்த,
கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், முதல்கட்ட விவாதம் நடந்துள்ளது.
தமிழகத்தில், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும்
பணி, ஓரிரு நாளில் துவங்க உள்ளது.கடந்த லோக்சபா தேர்தலின்போது,
வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்
நடத்தப்பட்டது.இதில், ஏராளமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். அவர்களில்
தகுதியான, 12 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில்
சேர்க்கப்பட்டது.அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள
அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.
நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக்
கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி
பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல்
பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.
அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை,
முறையாக செலுத்தாததால், அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும்' என,
வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்புவதால், அரசுப்பணியாளர்கள் புலம்பி
வருகின்றனர்.ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர்,
வருமான வரி செலுத்த வேண்டும். இந்த தொகையை, மோடி தலைமையிலான புதிய அரசு,
2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
"புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு
ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன்
வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல்
அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர்
பேசியதாவது: மாணவர்களுக்கு எளிய முறையில் எழுத்தறிவை வளர்க்கும் வகையில்
கற்பித்தல் பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு புதிய வார்த்தைகளை
கற்பிக்கும் போது, அதன் அர்த்தத்தை மாணவர்கள் மனதில் பதியும் வகையில்
விளக்க வேண்டும்.
எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்களுக்கான
விருப்ப நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என ஆய்வு ஒன்று
தெரிவிக்கிறது. இந்த வரிசையில், முதலிடத்தில் அமெரிக்கா வருகிறது.
அதற்கடுத்து, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஹாங்காங், ஜெர்மனி,
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள், முதல் 10
இடங்களுக்குள் வருகின்றன.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின்
பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு
எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக
வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர்
இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை: LIC , INDIAN OIL அறிவிப்பு
- Accountancy 5 Mark Important Questions - English Medium
- Commerce 5 Mark & Important Questions - English Medium
Prepared by Mr. T. VIMALRAJ, M.Com, MBA, B.Ed.,
Economics
- Economics - Book Back Questions - Tamil Medium
Thanks to SATHYA Xerox & Browsing Centre.
பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
TET – வழக்கு
பத்து நாளில் தீர்ப்பு வெளியிடப்படலாம்?
இன்று காலை (16.09.2014) சென்னை
நீதிமன்றத்தில் டெட் இடஒதுக்கீடு மற்றும்
வெயிட்டேஜ் குறித்த வழக்குகள் விசாரணை
நடைபெற்றது.
தந்தை உயிரிழந்தபோது சிறுவனாக இருந்தவருக்கு கருணை அடிப்படையில் வேலை
வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகேசன் என்பவரின் தந்தை வருவாய்த் துறையில் ஊழியராகப் பணியாற்றினார். கடந்த 2001-ம் ஆண்டு அவர்
உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அப்போது அழகேசன் சிறுவனாக இருந்தார்.
அந்த நேரத்தில் அழகேசனின் தாயார் தனக்கு கருணை
அடிப்படையில் வேலை வழங்கக் கோரி
விண்ணப்பம் அளித்தார். எனினும் அவருக்கு வேலை
வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எங்கும்
எதிலும் ஊழல் என்றாகி விட்டதால், மக்களுக்கு அரசு நிர்வாகங்கள் மீது கடும்
வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், தேர்தல்களில் மக்கள் தங்கள்
அதிருப்திகளை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிக்கிறார்கள். ஊழல் மீது
மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினால்தான், லோக்பால் அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்
அன்னா ஹசாரே நடத்திய போராட்டங்களுக்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள்.
கடைசியில், அந்த போராட்டத்துக்கு குவிந்த நிதிக்கு சரியான கணக்கு
வழக்குகள் உள்ளதா என்று சர்ச்சை கிளம்பி, மக்களுக்கு அந்த போராட்டங்களின்
மீதும் நம்பிக்கை குறைந்தது.
பல பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை தனியார்
பள்ளிகளில் சேர்க்க விரும்பினாலும், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு
கடும் போட்டியைத் தருபவையாக உள்ளன. அரசுப் பள்ளிகள், தங்களின் தரத்தை
சிறிதுசிறிதாக உயர்த்தி வருகின்றன என்று கல்வியாளர்கள் ஒப்புக்
கொள்கிறார்கள்.
அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம். அழகான கையெழுத்து, படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.
சென்னை
சின்மயா நகரில் வசிக்கும், மத்திய அரசின் ஓய்வு பெற்ற அதிகாரியான
சுப்பிரமணியன், 72, ஓய்வுபெறும் அதிகாரிகளுக்கு, மூன்று வகையான
வழிகாட்டல்களை வழங்குகிறார். ''ஒன்று, ஓய்வு பெற்றவுடன் சொந்த ஊருக்குச்
செல்லுங்கள்; இரண்டு, சொந்த பந்தங்களை இணைப்பதில் அக்கறை காட்டுங்கள்;
மூன்று, நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவியை
செய்யுங்கள்,''இதுபோன்ற அறிவுரைகள் வழங்க இவருக்கு, அதிக தகுதி
உள்ளது.காரணம் என்னவெனில், சென்னை, திருவண்ணாமலை, வேலுார் என, ஊர் ஊராக
அலைந்து திரிந்து, அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை
படிக்கும், மாணவர்களின் கல்விக்காக, தனது ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை,
தொடர்ந்து செலவிட்டு வருகிறார், சுப்பிரமணியன்.
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள்
தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
பிரேமா நாராயணன், படங்கள்: எம்.உசேன், ப. சரவணகுமார்
குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல, அது ஒரு கலை. '’உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்,
அவ்வளவுதான்' என்றார் கலீல் ஜிப்ரான். ஒருபுறம் தங்கள் நிறைவேறாத கனவுகளைக்
குழந்தைகள் மூலம் திணிக்கும் 'ரிங் மாஸ்டர்’
பெற்றோர்கள், இன்னொருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியுடனே
சேர்ந்து வளரும் குழந்தைகள் இவற்றுக்கு இடையில்தான் இருக்கிறது குழந்தை
வளர்ப்பு என்னும் கலை.
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில்,
வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம்
(எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி
நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி
பாதிக்கப்படுகிறது.