The hindu tamil edition
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பிரச்சினையிலும் தமிழக அரசு அலட்சியம் காட்வதாக
திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தகுதிகாண் மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கருணாநிதி - தினமணி
இடைநிலை ஆசிரியர்கள் 795 பேர் அவரவர் மாவட்டங்களுக்குள்ளாகவே பணி நியமனம் பெற்றுள்ளனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற்றனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5), தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கான தேர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது போலீஸ்
ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா? என விசாரிக்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில், மின்னியல் துறை சார்பில் தேசிய அளவிலான 'அல்கானசி' என்ற கருத்தரங்கு துவங்கியது.
சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத, 854 இடைநிலை ஆசிரியர், நேற்று, வெளி மாவட்டங்களில், பணி நியமன உத்தரவை பெற்றனர்.
பொது வருங்கால வைப்பு நிதி - 2014-15ம் ஆண்டுக்கான இணையதள வாயிலாக
பதிவிறக்கம் செய்யப்படும் கணக்குத்தாள்களை கொண்டு ஊழியர்களுக்கு தற்காலிக
முன் பணம் மற்றும் பகுதி இறுதி பணம் பட்டியல்களை அனுமதிக்க உத்தரவு
ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.
சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை..
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை-
3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus
தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம்
செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்' என, ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
'தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும்
கிடையாது; வழக்கம்போல், இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி,
சிறப்பாக கொண்டாடப்படும்' என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில்
இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள்
குறித்த ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது.
இந்து சமய அறநிலையத் துறை, தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள உதவி ஆணையர்
பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணலை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் நடத்தவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டித்
தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள்
காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் -
தினத்தந்தி
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு
பட்டியலில்இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநியமன
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச்
செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3)
தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை
ஆசிரியர்களுக்கான பணிநியமனம் வழங்கும் கவுன்சலிங் நேற்று நடைபெற்றது.
தொடக்கக்
கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில்,
நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து
05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு
தொடக்கக்
கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக
நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே
பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
'ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்;
யார் எழுதக் கூடாது' என்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இரு துறைகளின்
இயக்குனர்கள், தெளிவான உத்தரவை பிறப்பிக்காததால், பணி நிரந்தரம் ஆக
முடியாமல், ஏராளமான ஆசிரியர் தவித்து வருகின்றனர்.
மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற
நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை
செயல்பாட்டைத் துவக்கியது. தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட்
என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய
துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
பேரணாம்பட்டு பாகர் உசேன் வீதியை சேர்ந்த
கண்ணபிரான் மகள் ஹரிணி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6–ம்
வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளி கழிவறை பகுதியில்
மாணவி ஹரிணி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை
கண்ட ஆசிரியார்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி உயிரிழந்தார்.
வாய்ப்புண்
வந்து விட்டால் 2, 3 நாட்களுக்கு கடுமையான அவஸ்தைதான். சாப்பிடும் போதும்,
பேசும்போது வலி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடும். தட்ப வெப்பம் மற்றும்
உடலின் தன்மைக்கு ஏற்ற உணவுகள் சாப்பிடுவது, உணவில் போதுமான சத்துகள்
இருக்கும்படி பார்த்துக் கொள்வது, நோயின் அறிகுறி தென்பட்டவுடன் டாக்டரை
அணுகுவது என இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாய்ப்புண்
அவஸ்தையில் இருந்து விடுதலை பெறலாம் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
கோபி, மொடச்சூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கு குறித்த
கருத்தரங்கில், திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ., விண்கல ஏவுகணை வடிவமைப்பு இணை
இயக்குனர் முத்துக்குமார் பேசியதாவது:
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற
மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியராக
வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும்
திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், குடியரசுத்
தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5
ஆம் நாள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
*05.09.2014-ஆசிரியர்
தினம்.
*06.09.2014-குறை
தீர் மனு சிறப்பு முகாம்
மாணவர்களை
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்
கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில்
பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு
இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால்
அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை
ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.
திருமணம் முடிந்தவுடன், மனைவியுடன் வந்து, ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், வாலிபர் பங்கேற்றார்.
சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை
இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று
(திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்பட
தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.