Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET PAPER I :சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு ; மற்றவர்கள் வர வேண்டாம்

            தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களின் வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தகுதி இருந்தும் பேராசிரியர் பணி மறுப்பு - டி.ஆர்.பி., செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

           கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
 

இன்னும் ஒருவாரத்தில் எம்.எட். மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங் பற்றிய அறிவிப்பு

           பி.எட் படிப்புக்கான பொது கவுன் சலிங் புதன்கிழமை தொடங்கியது. இதில் இந்த ஆண்டு முதல்முறை யாக ஆன்லைன் முறையில் கவுன்சலிங் நடக்கிறது. 

3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு - தினமலர்

            சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சியா : ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கு வாய்ப்பு - தினமலர்

          பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு வசதியாக, ஆசிரியர் பயிற்சி சேர்க்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி

       பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்

       தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் சார்பான உத்தரவு

தற்போதைய அறிவியல் பாடங்களால் சலிப்புதான் ஏற்படுகிறது: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்

          "பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் பாடங்களால், மாணவர்களுக்கு சலிப்புதான் ஏற்படுகிறதே தவிர, அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை" என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.

சிசாட் தேர்வையே ரத்து செய்ய தொடர்ந்து போராட்டம்

            ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி களை தேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வின், சிசாட் கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ள ஆங்கில பகுதி மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்பட மாட்டாது என, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அதையும் ஏற்றுக் கொள்ளாத தேர்வர்கள், சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கோரி, நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சினை - இந்தி பேசாத மாநில எம்.பி.,க்கள் எதிர்ப்பு

              மத்திய பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், இந்தி மொழி பேசும், வட மாநில தேர்வர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தி மொழி பேசாத மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள், இந்திக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்


ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்

          ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது

         துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை/ அறிவுரை.

சென்னை செல்லும் நண்பர்கள் நமது ஆசிரியர் இல்லத்தை பயன் படுத்தி பயன் அடையுங்கள் --

ஆசிரியர் இல்லம் ( TEACHER HOME ) 

ஜெய கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி,
சைதாபேட்டை ( NEAR BUS STAND )

( Land Mark: தமிழ் நாடு திறந்த வெளி பல்கலைக் கழகம் அருகில்)



TNTET: கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா? தினமலர்

         இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.

சிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்

          தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

      ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்

          பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப்பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச்செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர்மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

           அனைத்துவகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி.

          இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.
 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில்விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது.
 

இன்று பி.எட். கலந்தாய்வு தொடக்கம்.

           BEd  படிப்புக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் 4 இடங்களில் புதன்கிழமைதொடங்க உள்ளது.அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,155 இடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
 

புறக்கணிப்பு! : தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி... ஆசிரியர்களுக்குள் "ஈகோ' பிரச்னை

       திருச்செங்கோடு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சியை, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
 

TET இறுதி பட்டியல் வெளியிட்ட பின்பே, PG TRB இறுதிபட்டியல் வெளியிடப்படும்.


         முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எவ்வளவு?

          மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.

TRB PG: இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

       TRB PG :இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாடங்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

பள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்

           பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார்.

கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: மாலை மலர்

          அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

TET புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

         திருநெல்வேலியில் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் - மேலும் 

தொடர் மதிப்பீட்டு முறை : 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

           தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கையேடுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்புக்கும் தொடர்மதிப்பீட்டு முறை விரிவுபடுத்தப்பட்டது. 
 

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர்பதவியை நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கால அவகாசம்

                சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சுந்தரவதனம்தாக்கல் செய்துள்ள  கோர்ட்டு அவமதிப்பு வழக்கில்கூறியிருப்பதாவது:– கோர்ட்டு அவமதிப்பு தமிழ்நாடு மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு தலைவர் பதவி பலஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
 

19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தவு

         தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும் - மதுரை ஐகோர்ட் கிளை

     கல்வியியல் கல்லூரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive